ஜோசு மாலிகாபாடி
From Wikipedia, the free encyclopedia
புரட்சியின் கவிஞர் என்று பிரபலமாக அழைக்கப்படும் ஜோசு மாலிகாபாடி (Josh Malihabadi) (5 திசம்பர் 1898 - 22 பெப்ரவரி 1982) என்பவர் பிரிட்டிசு இந்தியாவின் சகாப்தத்தின் மிகச்சிறந்த உருது கவிஞர்களில் ஒருவராக கருதப்படுகிறார். ஜோசு எப்போதும் நிறுவப்பட்ட ஒழுங்கை சவால் செய்து தாராளவாத விழுமியங்களுக்காக நின்றார். இவர் தைரியமானவராக இருந்தார். இவர் ஒருபோதும் கொள்கைகளில் சமரசம் செய்யவில்லை. இவர் தனது வாழ்நாளில் 100,000 க்கும் மேற்பட்ட அழகான இணை கவிதைகளையும் 1,000 க்கும் மேற்பட்ட ரூபாயத்தையும் எழுதினார். இவரது சுயசரிதையான “யாதோன் கி பாரத்” என்பது உருது மொழியில் இதுவரையில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இது வெளிப்படையான மற்றும் நேர்மையான முறையில் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவகர்லால் நேரு இவரை மிகவும் மதித்தார். லாலா கிஷண் லால் கல்ராவின் யுனைடெட் காபி இல்லத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பை தவறவிட்டார். அங்கு ஜோசு நட்சத்திர ஈர்ப்பாக இருந்தார். [1] [2] இவர் பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்து பாக்கித்தான் குடிமகனாக ஆன 1956 வரை இந்திய குடிமகனாக இருந்தார். இவரது சில படைப்புகள் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டன. தி யூனிட்டி ஆஃப் மேன்கைண்ட் எலிஜீஸ் என்ற நூலை பாக்கித்தான் குடிமகனும் உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான சையத் அக்பர் பாசா திர்மிஜி என்பவர் மொழி பெயர்த்தார். [3]
ஜோசு மாலிகாபாடி | |
---|---|
![]() ஜோசு (1949) | |
பிறப்பு | சபீர் அசன் கான் 1898 திசம்பர் 5 மாலிகாபாத், வடமேற்கு மாகாணங்கள், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இறப்பு | 22 பெப்ரவரி 1982(1982-02-22) (அகவை 83) இஸ்லாமாபாத், பாக்கித்தான் |
தேசியம் | இந்தியன் (1956 வரை) பின்னர் பாகிஸ்தானியர் |
மற்ற பெயர்கள் | சயார்-இ-இன்குலாப் |
கல்வி | புனித பீட்டர் கல்லூரி விஸ்வபாரதி பல்கலைக்கழகம் |
பணி | கவிஞர், சிந்தனையாளர், தொலைநோக்கு பார்வையாளர், மொழியியலாளர் |
அரசியல் இயக்கம் | முற்போக்கு எழுத்தாளர்களின் இயக்கம் |
விருதுகள் | பத்ம பூசண் (1954) இலால்-இ-இம்தியாசு (2013) |