செலாயாங்
From Wikipedia, the free encyclopedia
செலாயாங், (மலாய்: Selayang; ஆங்கிலம்: Selayang; சீனம்: 士拉央); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கோம்பாக் மாவட்டத்தில், செலாயாங் நகராட்சியின் (Selayang Municipal Council) நிர்வாகத் தலைமையகத்தைக் கொண்ட நகரம்; மலேசிய வரலாற்றில் நன்கு அறியப்பட்ட நகரமும் ஆகும். இந்த நகரத்தின் ஒரு சிறிய பகுதி கோலாலம்பூர் மாநகராட்சியின் நிர்வாகத்தின் கீழ் வருகிறது.[1]
விரைவான உண்மைகள் செலாயாங்Selayang, நாடு ...
செலாயாங் Selayang | |
---|---|
ஆள்கூறுகள்: 3°19′13.73″N 101°34′33.32″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
மாவட்டம் | கோம்பாக் மாவட்டம் |
நிர்வாக மையம் | செலாயாங் |
அரசு | |
• நகராட்சி | செலாயாங் நகராட்சி/br>(Selayang Municipal Council) |
பரப்பளவு | |
• மொத்தம் | 549.33 km2 (212.10 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 7,64,327 |
நேர வலயம் | மலேசிய நேரம் |
அஞ்சல் குறியீடு | 68100 |
தொலைபேசி எண்கள் | +60-3 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | B |
இணையதளம் | mps |
மூடு
1950-ஆம் ஆண்டுகளில், மலேசியாவில் தமிழர்கள் கணிசமான அளவிற்கு வாழ்ந்த இடங்களில் செலாயாங் நகரமும் ஒன்றாகும். மலேசிய இந்தியர் சமூகத்தைச் சேர்ந்த கல்விமான்கள்; சமூக ஆர்வலர்கள்; எழுத்தாளர்கள்; ஆசிரியர்கள் பலரை உருவாக்கிய பெருமை இந்த செலாயாங் நகரத்திற்கு உண்டு.
இந்த நகர்ப் பகுதியில் சீனர்கள் அதிகமாக வாழ்ந்தாலும் தமிழர்களின் மக்கள் தொகையும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு உள்ளது.