செயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு
சொத்து வழக்கு / From Wikipedia, the free encyclopedia
செயலலிதா சொத்து குவிப்பு வழக்கு என்பது 1991-96 தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த செயலலிதா வருமானத்திற்கு அதிகமாகச் சேர்த்த சொத்துக்கள் பற்றிய வழக்கைக் குறிக்கும். இவ்வழக்கின் முடிவில், சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. 24, சூன், 1991 முதல் ஏப்ரல் 4, 1996 வரை முதன் முறையாக தமிழகத்தின் முதல்வராக அவர் இருந்தார். இந்த ஐந்து ஆண்டுகளில் அவர் தன் வருமானத்திற்கு கூடுதலாக சொத்துகளைச் சேர்த்துள்ளதாக அப்போது ஜனதா கட்சியின் தலைவராக இருந்த சுப்பிரமணியம் சுவாமி அப்போதைய தமிழக ஆளுநர் சென்னா ரெட்டியிடம் அனுமதி பெற்று, பிறகு 14, சூன், 1996இல் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.[1] அந்த மனுவை விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி ராமமூர்த்தி, தமிழ்நாடு ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை இதனை புலனாய்வு செய்ய ஆணையிட்டார். இச்சொத்துக்களின் அன்றைய மதிப்பு ₹66.65 கோடியாகும். இவ்வழக்கு 1996ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசால் 1996 திசம்பர் அன்று அரசுத்தரப்பு வழக்காக மாற்றப்பட்டது.[2] 1996, டிசம்பர் மாதத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போயசு கார்டனில் உள்ள செயலலிதாவின் வீட்டை வண்ண தொலைக்காட்சி வழக்கிற்காகச்[3] சோதனையிட்டு அசையும் சொத்துக்களான 800 கிலோ வெள்ளி, 28 கிலோ தங்கம், 750 சோடி காலணிகள், 10,500 புடவைகள், 91 கைக்கடிகாரங்கள் மற்றும் சில மதிப்பு மிக்க பொருள்களைக் கைப்பற்றினர். அவை அனைத்தும் சென்னையிலுள்ள ரிசர்வ் வங்கியின் காப்பகத்தில் வைக்கப்பட்டன. 1997ஆம் ஆண்டு இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜெயலலிதா, சசிகலா, ஜெ. இளவரசி மற்றும் வி. என். சுதாகரன் ஆகியோர் கூட்டு சதியில் ஈடுபட்டு சொத்து சேர்த்ததாக குறிப்பிடப்பட்டது.[4]
நாள் | 14 சூன் 1996 |
---|---|
நிகழிடம் | சென்னை |
Also known as | ஜெ சொத்து வழக்கு |
Participants | ஜெயலலிதா வி. கே. சசிகலா ஜெ. இளவரசி வி. என். சுதாகரன் |
Outcome | நான்காண்டு சிறை & அபராதம் |
குற்றங்கள் | அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்தது, கூட்டுச் சதி மற்றும் ஊழல் |
தீர்ப்பு | இந்திய உச்ச நீதிமன்றம்: விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றது. கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்பை இரத்து செய்து, அனைவருக்கும் நான்காண்டு சிறை தண்டனை மற்றும் ஜெயலலிதாவுக்கு மட்டும் நூறு கோடி ரூபாய் அபராதம் மற்றவர்களுக்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. |
தண்டனை(கள்) | உச்ச நீதிமன்றம்: 3; கர்நாடக உயர்நீதிமன்றம்: அனைவரையும் விடுவித்தது; விசாரணை நீதிமன்றம்: 4. |
வழக்கு | 18 ஆண்டுகள் |
குற்றம் சாட்டப்பட்டவர்களின் கோரிக்கைப்படி 1997ம் ஆண்டு தமிழக ஊழல் தடுப்பு காவல்துறை தயாரித்த குற்ற அறிக்கை தமிழ் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது.[5] இந்த தீர்ப்பின் காரணமாக தமிழக முதலமைச்சர் மற்றும் திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பதவி இரண்டையும் இழந்தார். மேலும் மீண்டும் வி.கே.சசிகலா பரிந்துரைப்படி ஓ. பன்னீர்செல்வத்தை இரண்டாம் முறையாக முதலமைச்சராக ஆக்கினார்.