செயப் பிரகாஷ் நாராயண் வானூர்தி நிலையம் (Jay Prakash Narayan Airport, (ஐஏடிஏ: PAT, ஐசிஏஓ: VEPT) பீகார் மாநிலத்தின் தலைநகரம் பட்னாவில் அமைந்துள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இது பட்னாவிற்கு தென்மேற்கே 5 கிலோமீட்டர்கள் (3.1 mi) தொலைவில் அமைந்துள்ளது.[4] இந்திய விடுதலை இயக்க வீரரும் புகழ்பெற்ற சமூகநீதி அரசியல்வாதியுமான செயப் பிரகாஷ் நாராயணனின் பெயர் இந்த வானூர்தி நிலையத்திற்குச் சூட்டப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள இரண்டு பன்னாட்டு வானூர்தி நிலையங்களில் இது ஒன்றாகும்; மற்றது கயையில் உள்ள கயை வானூர்தி நிலையம் ஆகும். [5]. இருப்பினும், பட்னா வானூர்தி நிலையம் கட்டுப்படுத்தப்பட்ட பன்னாட்டு வானூர்தி நிலையமாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளது; இங்குள்ள ஓடுபாதைகள் சிறியதாக, பெரிய வானூர்திகள் வந்து செல்ல தகுந்தவையாக இல்லை.[6][7] 2015-16 ஆண்டில் பயணிகள் போக்குவரத்து 32& வளர்ச்சியடைந்துள்ள இந்த வானூர்தி நிலையம் நெருக்கடிமிக்க இந்திய வானூர்தி நிலையங்களில் 17ஆம் இடத்தில் உள்ளது. [8] கூடிவரும் போக்குவரத்தைச் சமாளிக்க இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் இந்த வானூர்தி நிலையத்தின் கட்டமைப்பை நவீனப்படுத்தவும் விரிவாக்கவும் திட்டமிட்டு வருகிறது. இந்த விரிவாக்கம் 2021இல் முடிவடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.[9]. இது தவிரவும் பித்தா வான்படை வானூர்தித் தளத்தில் குடிசார் வளாகமொன்றை உருவாக்கி அதனை பட்னாவிற்கான இரண்டாவது மாற்று வானூர்தி நிலையமாக பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது..[10]
விரைவான உண்மைகள் செயப் பிரகாஷ் நாராயண் வானூர்தி நிலையம், சுருக்கமான விபரம் ...
மூடு