சூர்யகுமாரி
இந்திய நடிகை / From Wikipedia, the free encyclopedia
தங்குதூரி சூர்யகுமாரி ( Tanguturi Suryakumari) (13 நவம்பர் 1925 - 25 ஏப்ரல் 2005), தனது திருமணப் பெயரான சூர்யகுமாரி எல்வின் என்றும் அறியப்படும் இவர் ஓர் இந்தியப் பாடகியும், நடிகையும் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்த நடனக் கலைஞரும் ஆவார். ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தெலுங்குத் தாய் வாழ்த்தான " மா தெலுங்கு தல்லிகி " என்ற பாடலைப் பாடியுள்ளார்.[2] மிஸ் மெட்ராஸ் 1952 போட்டியில் வெற்றி பெற்றவர். மிஸ் இந்தியா 1952 போட்டியில் இரண்டாம் இடம் வந்தார்.[1] ஆந்திர மாநிலத்தின் முதல் முதலமைச்சராகவும் முன்பு சென்னையின் முதலமைச்சராகவும் பணியாற்றிய செயல்பாட்டாளரும் அரசியல்வாதியுமான த. பிரகாசம் அவர்களின் மருமகள் ஆவார்.
தங்குதூரி சூர்யகுமாரி | |
---|---|
![]() | |
பிறப்பு | (1925-11-13)13 நவம்பர் 1925 ராஜமன்றி, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய ஆந்திரப் பிரதேசம், இந்தியா) |
இறப்பு | 25 ஏப்ரல் 2005(2005-04-25) (அகவை 79) இலண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் |
தேசியம் | ![]() |
மற்ற பெயர்கள் | தங்குதூரி சூர்யகுமாரி |
பணி | வடிவழகி, பாடகி, நடிகை, நடனக் கலைஞர் |
வாழ்க்கைத் துணை | எரால்டு எல்வின்[1] |
ஒரு நடிகையாக, 1961 இல் இரவீந்திரநாத் தாகூரின் தி கிங் ஆஃப் தி டார்க் சேம்பர் என்ற நாடகத்தில் ராணி சுதர்சனாவாக நடித்ததற்காக, நியூயார்க் நாடக எழுத்தாளர்களின் அதிகாரப்பூர்வ அமைப்பான அவுட்டர் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் மூலம் வழங்கும் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.[2]