சுப்பிரமணியன் சந்திரசேகர்
From Wikipedia, the free encyclopedia
சுப்பிரமணியன் சந்திரசேகர் (Subrahmanyan Chandrasekhar) (அக்டோபர் 19, 1910 - ஆகஸ்ட் 21, 1995) வானியல்-இயற்பியலாளர் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியாவில் லாகூரில் பிறந்தவர். ஐக்கிய அமெரிக்கா, சிக்காகோவில் தனது வாழ்நாளின் பெரும் பகுதியைக் கழித்தவர்[2][3] விண்மீன்கள் பற்றிய இவரது ஆய்விற்காக இவருக்கும் வில்லியம் ஃபௌலருக்கும் 1983 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
விரைவான உண்மைகள் சுப்பிரமணியன் சந்திரசேகர்Subrahmanyan Chandrasekhar, பிறப்பு ...
சுப்பிரமணியன் சந்திரசேகர் Subrahmanyan Chandrasekhar | |
---|---|
சுப்பிரமணியன் சந்திரசேகர் | |
பிறப்பு | (1910-10-19)19 அக்டோபர் 1910 லாகூர், பஞ்சாப், இந்தியா (இன்றைய பஞ்சாப், பாக்கித்தான்) |
இறப்பு | 21 ஆகத்து 1995(1995-08-21) (அகவை 84) சிகாகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்கா |
குடியுரிமை | அமெரிக்கர் |
துறை | வானியற்பியல் பொதுச் சார்புக் கோட்பாடு பாய்ம இயக்கவியல் கதிர்வீச்சு |
பணியிடங்கள் | சிக்காகோ பல்கலைக்கழகம் யெர்க்சு வான்காணகம் பலிஸ்டிக் ஆய்வுகூடம் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | |
ஆய்வேடு | திசையொவ்வாப் பரம்பல் (1933) |
ஆய்வு நெறியாளர் | இரால்ஃப் பௌலர், ஆர்த்தர் எடிங்டன் |
முனைவர் பட்ட மாணவர்கள் | |
அறியப்படுவது |
|
விருதுகள் |
|
துணைவர் | லலிதா துரைசாமி (1936–1995) |
கையொப்பம் |
மூடு
1937 இலிருந்து 1995 இல் இறக்கும் வரை சிக்காகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். இவர் 1953இலிருந்து ஐக்கிய அமெரிக்கக் குடிமகனாவார்.