சிறீகித்
தாய்லாந்தின் இராணி / From Wikipedia, the free encyclopedia
சிறீகித் (Sirikit) (12 ஆகஸ்ட் 1932 ) தாய்லாந்தின் இராணி தாயாவார். இவர் மன்னர் பூமிபால் அதுல்யாதெச்ச்சின் (ஒம்பதாம் இராமா) மனைவியும், மன்னர் வச்சிரலோங்கோனின் (பத்தாம் இராமா) தாயுமவார். இவர் பாரிஸில் பூமிபாலை சந்தித்தார். அங்கு இவரது தந்தை தாய்லாந்து தூதராக இருந்தார். பூமிபால் முடிசூட்டுவதற்கு சிறிது காலம் முன்பு இவர்கள் 1950இல் திருமணம் செய்து கொண்டனர். சிறிகித் 1956ஆம் ஆண்டில் மன்னர் பௌத்த சமயத் துறவரத்தில் நுழைந்தபோது அரசாட்சி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். உலகில் நீண்ட காலம் ஆட்சி செய்த அரச தலைவராக இருந்த இவர், உலகின் மிக நீண்ட காலம் பணியாற்றிய இராணி துணைவியாரும் ஆவார். 21 ஜூலை 2012 அன்று சிறிகித் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பின்னர் பொது நிகழ்ச்சிகளிலிருந்து விலகினார்.
விரைவான உண்மைகள் சிறீகித், தாய்லாந்தின் ஆட்சிப் பொறுப்பாளர் ...
சிறீகித் | |
---|---|
தாய்லாந்தின் இராணி | |
1960இல் இராணி சிறீகித் | |
தாய்லாந்தின் ஆட்சிப் பொறுப்பாளர் | |
முடிசூட்டுதல் | 5 மே 1950 |
பிறப்பு | 12 ஆகத்து 1932 (1932-08-12) (அகவை 91) பதும்வான், பேங்காக், சியாம் |
துணைவர் | {{பூமிபால் அதுல்யாதெச் (ஒன்பதாம் இராமா) |28 ஏப்ரல் 1950}} |
குழந்தைகளின் பெயர்கள் | உபோல் ரத்தனா வச்சிரலோங்கோன் (பத்தாம் இராமா) இளவரசி சிரிந்தோர்ன் சுலாபோர்ன் |
மரபு | மகிதோல் (திருமணத்தின் மூலம்) கிட்டியக்கரா (பிறாப்பின் மூலம்) (சக்ரி வம்சம்) |
தந்தை | நக்கத்ரா மங்கலா |
தாய் | புவா நித்வோங்சு |
மதம் | தேரவாத பௌத்தம் |
கையொப்பம் |
மூடு