![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f9/St_Catherine._San_Domenico.jpg/640px-St_Catherine._San_Domenico.jpg&w=640&q=50)
சியன்னா நகர கத்ரீன்
From Wikipedia, the free encyclopedia
சியன்னா நகர புனித கத்ரீன் (25 மார்ச் 1347, சியன்னா - 29 ஏப்ரல் 1380, உரோம்) ஒரு தொமினிக்கன் மூன்றாம் சபையின் உறுப்பினரும், இறையியலாளரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் அவிஞ்ஞோன் நகரில் தங்கியிருந்த திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரி உரோமை நகருக்குத் திரும்பிச் செல்ல மிக முக்கிய காரணியாய் இருந்தார். 1970-இல் இவர் கத்தோலிக்க திருச்சபையின் மறைவல்லுநராக அறிவிக்கப்பட்டார். அசிசியின் புனித பிரான்சிசோடு இவரும் இத்தாலியின் பாதுகாவலராக கருதப்படுகின்றார்.
விரைவான உண்மைகள் சியன்னா நகர புனித கத்ரீன், கன்னியர்; மறைவல்லுநர் ...
சியன்னா நகர புனித கத்ரீன் | |
---|---|
![]() சியன்னா நகர புனித கத்ரீன், ஓவியர்: ஆந்திரே வாணி, சுமார். 14ம் நூற்றாண்டு | |
கன்னியர்; மறைவல்லுநர் | |
பிறப்பு | (1347-03-25)மார்ச்சு 25, 1347 Siena, இத்தாலி |
இறப்பு | ஏப்ரல் 29, 1380(1380-04-29) (அகவை 33) உரோமை நகரம், இத்தாலி |
ஏற்கும் சபை/சமயங்கள் | உரோமன் கத்தோலிக்கம்; ஆங்கிலிக்கம்; லூதரனியம் |
புனிதர் பட்டம் | 1461 by இரண்டாம் பயஸ் |
திருவிழா | ஏப்ரல் 29; ஏப்ரல் 30 (1628–1960-இருந்த நாட்காட்டி) |
சித்தரிக்கப்படும் வகை | தொமினிக்கன் சபையினரின் ஆடை, லில்லி மலர், முத்தகம், சிலுவை, இதயம், முள் முடி, ஐந்து காயம், மோதிரம், புறா, ரோஜா, மண்டை ஓடு |
பாதுகாவல் | பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா, தீயணைப்பு வீரர்கள், இத்தாலி, கருச்சிதைவுகள், தம் நம்பிக்கைக்காக அவதியுறும் மக்கள், பாலியல் சோதனையுறுவோர், நோயுற்றவர்களுக்கு, செவிளியர் |
மூடு