சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா
சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு அரசியல் கட்சி / From Wikipedia, the free encyclopedia
சிக்கிம் கிரந்திகாரி மோர்சா (மொழிபெயர்ப்பு: சிக்கிம் புரட்சிகர முன்னணி) என்பது இந்தியாவின், சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஒரு அரசியல் கட்சியாகும்.
விரைவான உண்மைகள் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, சுருக்கக்குறி ...
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா | |
---|---|
சுருக்கக்குறி | சி. கி. மோ. SKM |
தலைவர் | பிரேம் சிங் தமாங் |
நிறுவனர் | பிரேம் சிங் தமாங் |
தொடக்கம் | 4 பெப்ரவரி 2013 (11 ஆண்டுகள் முன்னர்) (2013-02-04) |
தலைமையகம் | கேங்டாக், சிக்கிம் |
கொள்கை | மக்களாட்சி சமூகவுடைமை |
நிறங்கள் | சிவப்பு |
இ.தே.ஆ நிலை | மாநில கட்சி[1] |
கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி (2019–தற்போது)[2] |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 1 / 543 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 245 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (சிக்கிம் சட்டப் பேரவை) | 31 / 32 |
தேர்தல் சின்னம் | |
![]() | |
கட்சிக்கொடி | |
![]() | |
இணையதளம் | |
www | |
இந்தியா அரசியல் |
மூடு
இக்கட்சியின் தலைவரான பிரேம் சிங் தமாங் என்னும் பி. எஸ். கோலே சிக்கிம் சட்டமன்ற உறுப்பினராகவும் சிக்கிம் சனநாயக முன்னணியின் முக்கிய நபர்களில் ஒருவராக இருந்தார். மேலும் இவர் சிக்கிம் மாநில அரசில் அமைச்சராகவும் இருந்தார். இந்நிலையில் 2009 திசம்பருக்குப் பிறகு, இவர் சிக்கிம் ஜனநாயக முன்னணியின் தலைவரும், சிக்கிமின் முதலமைச்சருமான பவன் குமார் சாம்லிங்கை விமர்சிக்கத் தொடங்கினார்.[3]
பவன் குமார் சாம்லிங்கின் 24 ஆண்டு ஆட்சிக்கு முடிவுகட்டி 2019 ம் ஆண்டு மே மாதம் 28 ம் தேதி, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா தலைவரான பி. எஸ் கோலே சிக்கிமின் முதலமைச்சராக பதவி ஏற்றார்.[4][5]