கொடுங்கல்லூர்
கேரளத்தின் திருச்சூர் மாவட்டதில் உள்ள நகரம் / From Wikipedia, the free encyclopedia
கொடுங்கோளூர் என்றழைக்கப்பட்ட கொடுங்கல்லூர் (Kodungallur) என்பது இந்தியாவின் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் மலபார் கடற்கரையில் பெரியாற்றின் கரையில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புள்ள நகராகும். இது தேசிய நெடுஞ்சாலை 66-ஐ ஒட்டி, கொச்சிக்கு வடக்கே 29 கிலோமீட்டர் (18 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. கேரளத் தடாகங்களின் வடக்கு முனையில் ஒரு துறைமுக நகரமாக இருக்கும் கொடுங்கல்லூர், விரிவான கேரள உப்பங்கழிகளுக்கும், கடற்படைகளுக்கும் ஒரு முக்கிய நுழைவு இடமாக இருந்தது. முசிரி, மகோதயபுரம், முயிறுகோடு, முசிரிஸ் என்ற பெயர்களால் இதற்கு முன்னர் அழைக்கப்பட்டுள்ளது.
கொடுங்கல்லூர்
കൊടുങ്ങല്ലൂർ கொடுங்ஙல்லூர் | |
---|---|
முனிசிபல் பட்டணம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | திருச்சூர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 17.3 km2 (6.7 sq mi) |
ஏற்றம் | 9 m (30 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 33,543 |
• அடர்த்தி | 1,900/km2 (5,000/sq mi) |
மொழிகள் | |
• அதிகாரபூர்வமானவை | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அகு | 680 664 |
தொலைபேசிக் குறியீடு | 0480 |
வாகனப் பதிவு | KL-8 / KL 47 |
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கொடுங்கல்லூர் நகராட்சியிலும், சுற்றுப்புறங்களிலும் (தரம் II) 60,190 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. இதன் சராசரி கல்வியறிவு விகிதம் 95.10 சதவீதமாகும். [1] சுமார் 64 சதவீத மக்கள் இந்து மதத்தையும், 32 சதவீதம் இஸ்லாம், 4 சதவீத கிறித்துவத்தையும் பின்பற்றுகிறார்கள். அட்டவணை சாதி (எஸ்.சி.) 7.8 சதவீதமாகவும், கொடுங்கல்லூரில் மொத்த மக்கள் தொகையில் 0.1 சதவீதமாகவும் ஆகவும் உள்ளது. [2]
திரிச்சூர் மாவட்டத்திலுள்ள கொடுங்கல்லூர் வட்டத்தின் தலைமையகம் கொடுங்கல்லூர் ஆகும். [2] கொடுங்கல்லூர் சட்டமன்றத் தொகுதி, சாலக்குடி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். [3] சாலை வலைப்பின்னல் மூலம் கேரளாவின் பிற நகரங்களுடன் கொடுங்கல்லூர் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஆலுவா இரயில் நிலையம் (28 கி.மீ) என்பது கொடுங்கல்லூருக்கு அருகிலுள்ள முக்கிய ரயில் நிலையமாகும்.
கோட்டப்புரம் கோட்டை / திப்பு கோட்டை என்று உள்நாட்டில் அழைக்கப்படும் கோட்டை கிரங்கனூர் (ஃபோர்டாலெசா சாவோ டோமே) 1523-ஆம் ஆண்டில் போர்த்துகீசியர்களால் கொடுங்கல்லூரில் கட்டப்பட்டது. இந்த கோட்டை 1565-இல் விரிவுபடுத்தப்பட்டது. மேலும் 1663-இல் இது டச்சுக்காரர்களின் கைகளில் சென்றது. [4] சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயில் தென்னிந்தியாவின் முக்கிய சிவன் கோயில்களில் ஒன்றாகும். திருவஞ்சிக்குளம் கோயிலில் உள்ள சிவன் கேரளாவின் சேர பெருமாள்களின் புரவலர் தெய்வமாக இருந்தார். மேலும் கொச்சின் அரச குடும்பத்தின் குடும்ப தெய்வமாக இருந்து வருகிறார்.