குறைப்பிரசவம்
From Wikipedia, the free encyclopedia
மனிதர்களில் குறைப்பிரசவம் (preterm birth) என்பது கருக்காலம் (gestational age) 37 கிழமைகளாவதற்கு முன்னரே குழந்தை பிறப்பதாகும்.[1] அனேகமான சூழ்நிலைகளில், இதற்கான காரணம் தெளிவற்றதாகவும், அறியாததாகவும் இருக்கும். பல காரணிகள் இந்த குறைபிரசவத்துக்கு காரணமாக இருப்பதுடன், அவற்றை கட்டுப்படுத்துவதும் கடினமாகும்.
குறைப்பிரசவம் Preterm birth | |
---|---|
ஒத்தசொற்கள் | முற்றாப் பிரசவம், Premature birth, preemies, premmies |
குழந்தை காப்பகப் பெட்டியினுள் வைக்கப்பட்டிருக்கும் முற்றாப்பிரசவக் குழந்தை | |
சிறப்பு | மகப்பேறியல், குழந்தை மருத்துவம் |
அறிகுறிகள் | கருக்காலம் 37 கிழமைகள் ஆவதற்கு முன்னரே குழந்தை பிறத்தல்[1] |
சிக்கல்கள் | பெருமூளை வாதம், முறையான விருத்தி பின்போடப்ப்படல், கேள்விக் குறைபாடு, பார்வைக் குறைபாடு[1] |
காரணங்கள் | பொதுவாக அறியப்படுவதில்லை[2] |
சூழிடர் காரணிகள் | நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், பல குழந்தைப்பேறு, உடற் பருமன், எடைக்குறைவு, யோனியழற்சிகள், குளூட்டன் ஒவ்வாமை, புகையிலை பிடித்தல், உளவியல் அழுத்தம்[2][3][4] |
தடுப்பு | புரோஜெஸ்ட்டிரோன்[5] |
சிகிச்சை | புரணித்திரலனையம், குழந்தையை அணைத்து வைத்துச் சூடாக வைத்திருத்தல், தாய்ப்பாலூட்டல், நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சை, மூச்சுவிடலுக்கு ஆதாரமளித்தல்[2][6] |
நிகழும் வீதம் | ஆண்டுக்கு ~15 மில்லியன் (கிட்டத்தட்ட நடைபெறும் பிரசவங்களின் 12%)[2] |
இறப்புகள் | 805,800[7] |
இந்த குறைப்பிரசவம் என்ற சொல்லும், முற்றாப்பிரசவம் (premature birth) என்ற சொல்லும் இணைப்பெயர்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. முற்றாப் பிரசவம் என்னும்போது, குழந்தையானது பிரசவத்தின் பின்னர் வெளிச் சூழலில் உயிருடன் இருந்து, வளரவும், விருத்தியடையவும் தேவையான அளவில் குழந்தையின் உறுப்புகள் விருத்தியடைய முன்னரே குழந்தை பிறத்தலைக் குறிக்கும். முற்றாப்பிரசவத்தில் பிறக்கும் பிள்ளைகளின் உடல் வளர்ச்சி, உளவியல் விருத்தி என்பன ஆற்றலற்றதாகவோ, தடைகளைக் கொண்டதாகவோ இருப்பது உட்பட பல விதமான குறுகியகால, நீண்டகால இடர்களைக் கொண்டதாக இருக்கும்.
முற்றாப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை பேணிப் பாதுகாப்பதில் பலவிதமான மருத்துவ முன்னேற்றம் ஏற்பட்டிருந்த போதிலும், குறைப்பிரசவம் நிகழ்வதைக் குறைப்பது இன்னமும் முடியாமலேயே உள்ளது[8]. குறைப்பிரசவமே, முற்றாப்பிரசவத்துக்கு பொதுவான காரணமாகும். அத்துடன் வளர்ந்துவரும் நாடுகளில் முற்றாப்பிரசவக் குழந்தைகளுக்கான போதிய பராமரிப்பு வழிகள் இல்லாமையால் குழந்தை இறக்கும் நிலைக்கும் செல்ல வேண்டியதாகி விடுகின்றது.