கீதா மகாலிக்
ஒடிசி நடனக் கலைஞர் / From Wikipedia, the free encyclopedia
கீதா மகாலிக் ( Geeta Mahalik, பிறப்பு 1948 ) [1] என்பவர் ஒரு இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். இந்திய பாரம்பரிய நடன வடிவமான ஒடிசியின் மிகச் சிறந்த நடனக் கலைஞர்களில் இவர் ஒருவர் என்று பலரால் கருதப்படுகிறார் .[2] ஒடிசி நடனமானது இந்தியாவின் பாரம்பரிய நடன வடிவங்களில் மிகப் பழமையானது என்று பலரால் கருதப்படுகிறது.[3][4] இந்திய கலை மற்றும் கலாச்சாரத் துறைக்கு இவர் செய்த சேவைகளுக்காக இந்திய அரசு 2014 ஆம் ஆண்டில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் நாட்டின் நான்காவது மிக உயரிய விருதான பத்மசிறீ விருதை வழங்கி கௌரவித்தது.[5]