கிழக்கு தில்லி மாநகராட்சி
From Wikipedia, the free encyclopedia
கிழக்கு தில்லி மாநகராட்சி (East Delhi Municipal Corporation (EDMC) தில்லியின் ஐந்து உள்ளாட்சி அமைப்புகளில் ஒன்றாகும். இது கிழக்கு தில்லி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். நிர்வாக வசதிக்காக 13 சனவரி 2012 அன்று தில்லி மாநகராட்சியை மூன்றாகப் பிரித்த போது, கிழக்கு தில்லி மாநகராட்சி நிறுவப்பட்டது.[1] 140 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள கிழக்கு தில்லி மாநகராட்சி 64 வார்டுகளும், சதாரா வடக்கு மற்றும் சதாரா கிழக்கு என 2 மண்டலங்களும் கொண்டுள்ளது. இதன் மக்கள் தொகை 18 இலட்சம் ஆகும்.[2]
விரைவான உண்மைகள் கிழக்கு தில்லி மாநகராட்சி, வகை ...
கிழக்கு தில்லி மாநகராட்சி | |
---|---|
வகை | |
வகை | |
வரலாறு | |
உருவாக்கம் | 2012; 12 ஆண்டுகளுக்கு முன்னர் (2012) |
முன்பு | தில்லி மாநகராட்சி |
தலைமை | |
மேயர் | சியாம் சுந்தர் அகர்வால், பாரதிய ஜனதா கட்சி |
துணை மேயர் | கிரண் வைத்தியா, பாரதிய ஜனதா கட்சி |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 64 |
அரசியல் குழுக்கள் | பாரதிய ஜனதா கட்சி (47) ஆம் ஆத்மி கட்சி (12) இந்திய தேசிய காங்கிரசு (3) பிறர் (2) |
ஆட்சிக்காலம் | 5 ஆண்டுகள் |
தேர்தல்கள் | |
நேரடித் தேர்தல் | |
அண்மைய தேர்தல் | ஏப்ரல் 2017 |
அடுத்த தேர்தல் | ஏப்ரல் 2022 |
வலைத்தளம் | |
https://mcdonline.nic.in/edmcportal/ |
மூடு
தேசிய தலைநகர் வலயத்தின் பிற நான்கு உள்ளாட்சி அமைப்புகள் புதுதில்லி மாநகராட்சி, தெற்கு தில்லி மாநகராட்சி, வடக்கு தில்லி மாநகராட்சி மற்றும் தில்லி பாசறை மன்றம் ஆகும்.