![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/35/Smyrna-vict-families-1922.jpg/640px-Smyrna-vict-families-1922.jpg&w=640&q=50)
கிரேக்க இனப்படுகொலை
From Wikipedia, the free encyclopedia
Trialsஉதுமானிய சிறப்பு இராணுவ நீதிமன்றம் கிரேக்க இனப்படுகொலை (Greek genocide[4][5][6][7][A 1] (கிரேக்க மொழி: Γενοκτονία των Ελλήνων, Genoktonia ton Ellinon) என்பது அனத்தோலியா கிறிஸ்தவ உதுமானிய கிரேக்க மக்களை திட்டமிட்டுக் கொன்றது ஆகும். இது முக்கியமாக முதலாம் உலகப் போரின்போதும் அதன் பின்னர் (1914–1922) அவர்களின் சமய, இனத்தின் காரணமாக மேற்கொள்ளப்பட்டது.[13] இது மூன்று பாசாக்கள் தலைமையிலான உதுமானிய பேரரசின் அரசாங்கத்தாலும்இ பேரரசின் பூர்வீக கிரேக்க மக்களுக்கு எதிராக முஸ்தாபா கெமால் அத்தாதுர்க் தலைமையிலான பெரும் தேசிய சட்டசபையின் அரசாங்கத்தாலும் நிகழ்த்தப்பட்டது.[1] இவ்இனப்படுகொலையில் படுகொலைகள், சிரிய பாலைவனம் வழியாக மரண அணிவகுப்புகளை உள்ளடக்கிய கட்டாய நாடுகடத்தல்கள்,[14] வெளியேற்றங்கள், உடனடி மரணதண்டனைகள் மற்றும் கிழக்கு மரபுவழி கலாச்சார, வரலாற்று மற்றும் மத நினைவுச்சின்னங்களை அழித்தல் ஆகியவை அடங்கும்.[15]
கிரேக்க இனப்படுகொலை | |
---|---|
முதலாம் உலகப் போர், முதலாம் உலகப் போருக்குப் பின் | |
![]() கிரேக்க குடிமக்கள் தங்கள் இறந்த உறவினர்களுக்காக துக்கம் அனுசரிக்கிறார்கள், சிமிர்னாவின் பெரும் தீ, 1922 | |
இடம் | உதுமானியப் பேரரசு |
நாள் | 1913–1923[1] |
தாக்குதலுக்கு உள்ளானோர் | கிரேக்க மக்கள், குறிப்பாக பான்டசு, கப்படோசியா நகரம், ஐயோனியா, கிழக்கு திரேசு |
தாக்குதல் வகை | நாடு கடத்தல், படுகொலை, மரண அணிவகுப்பு, பிற |
இறப்பு(கள்) | 300,000–900,000[2][3] |
தாக்கியோர் | உதுமானியப் பேரரசு, துருக்கிய தேசிய இயக்கம் |