கர்கலா
From Wikipedia, the free encyclopedia
கர்கலா (Karkala) கார்லா என்றும் அழைக்கப்படும், இது ஒரு நகரம் மற்றும் இந்தியாவின் கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கர்கலா வட்டத்தின் தலைமையகமும் ஆகும். இது மங்களூரிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அருகே அமைந்துள்ளது .
கர்கலா
கர்லா | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): சைன மதத் தளம் | |
ஆள்கூறுகள்: 13.2°N 74.983°E / 13.2; 74.983 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
பிராந்தியம் | துளு நாடு |
Settled | 1912 |
தலைமையகம் | உடுப்பி |
பரப்பளவு | |
• மொத்தம் | 23.06 km2 (8.90 sq mi) |
ஏற்றம் | 80 m (260 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 25,824 |
• அடர்த்தி | 1,089.16/km2 (2,820.9/sq mi) |
மொஅலுவல் | |
• பிராந்தியம் | துளு, கொங்கணி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 574 104 |
தொலைபேசி இணைப்பு எண் | 91-(0)8258 |
வாகனப் பதிவு | கேஏ-20 |
பாலின விகிதம் | 1.11 ♂/♀ |
இணையதளம் | www |
பிரபலமான சமண மையம் |
சமணர் ஆட்சிக் காலத்தில் இந்த நகரம் பாண்டிய நகரி என்று அழைக்கப்பட்டது. பின்னர் கரிகல்லு என்றும், பின்னர் கர்கல் என்றும், பின்னர் இறுதியாக கர்கலா என்றும் அறியப்பட்டது.
இந்நகரத்திற்கு இயற்கை மற்றும் வரலாற்று அடையாளங்கள் பல உள்ளன. இது ஆண்டு முழுவதும் பசுமையால் மூடப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையின் அடியில் அமைந்துள்ளது. ஹெப்ரி, சிருங்கேரி, கலாசா, ஹொரனாடு, உடுப்பி, கொல்லூர், சுப்ரமண்யா மற்றும் தர்மஸ்தாலா ஆகிய வழிகளில் செல்லும் முக்கிய இடத்தின் காரணமாக இது மத சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு முக்கிய சந்திப்பாகும்.
நள்ளூர் என்பது கர்கலா வட்டத்தில அமைந்துள்ள ஒரு கிராமம். நீண்ட காலத்திற்கு முன்பே கட்டப்பட்ட ஒரு அதிசய நல்லூர் சமண கோயில் அமைந்துள்ளது.