கப்பன் பூங்கா
From Wikipedia, the free encyclopedia
சிறீ சாமராசேந்திர பூங்கா என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் கப்பன் பார்க் (Cubbon Park) [2] என்பது பெங்களூரு நகரத்தின் முக்கிய அடையாளமான அதன் 'நுரையீரல்' பகுதியாக மத்திய நிர்வாக பகுதியில், (12.97 ° வடக்கிலும் 77.6 ° கிழக்கிலும்) அமைந்துள்ளது. இப்பூங்கா முதலில் 1870 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. ரிச்சர்ட் சாங்கி என்பவர் மைசூர் மாநிலத்தின் அப்போதைய பிரிட்டிசு தலைமை பொறியாளராக இருந்தபோது, இது 100 ஏக்கர் (0.40 கிமீ 2) பரப்பளவைக் கொண்டிருந்தது. பின்னர் விரிவாக்கம் நிகழ்ந்துள்ளது. இப்போது உள்ள பகுதி சுமார் 300 ஏக்கர் (1.2 கிமீ 2) என்பதாகும்.[3] இப்பூங்கா ஏராளமான தாவரங்களின், விலங்கினங்களின் பதிவுசெய்யப்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. அதனுடன் ஏராளமான சுவாரஸ்யமும் மிக்க, அழகும் மிக்க கட்டிடங்களும் பிரபலமான நபர்களின் சிலைகளும் உள்ளன.[4]
கப்பன் பூங்கா
சிறீ சாமராசேந்திர பூங்கா | |
---|---|
அண்மைப் பகுதி | |
ஆள்கூறுகள்: 12.97°N 77.6°E / 12.97; 77.6 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெங்களூரு நகர்ப்புறம் |
பெருநகரப் பகுதி | பெங்களூரு |
நிறுவப்பட்டது | 1870 |
தோற்றுவித்தவர் | சர் ஜான் மேடே [1] |
பெயர்ச்சூட்டு | பத்தாம் சாமராச உடையார் |
அரசு | |
• நிர்வாகம் | தோட்டக்கலைத் துறை, கர்நாடக அரசு |
பரப்பளவு | |
• மொத்தம் | 1.2 km2 (0.5 sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
Pin Code | 560001 |
இணையதளம் | http://www.horticulture.kar.nic.in/cubbon.htm |
1870 ஆம் ஆண்டில் மைசூரின் செயல் ஆணையரான சர் ஜான் மீட் என்பவரின் பெயரால் இந்த பொது பூங்கா முதன்முதலில் மீட்ஸ் பூங்கா என்று பெயரிடப்பட்டது. பின்னர் அந்தக் காலத்தின் மிக நீண்ட காலம் ஆணையாராக இருந்த சர் மார்க் கப்பனுக்குப் பிறகு கப்பன் பூங்கா என்று பெயர் மாற்றப்பட்டது. மைசூர் மாநிலத்தில் நான்காம் கிருட்டிணராச உடையார் ஆட்சியின் வெள்ளி விழாவை நினைவுகூரும் வகையில், 1927 இல், பூங்கா 19 நூற்றாண்டு ஆட்சியாளரான பத்தாம் சாமராச உடையார் நினைவாக (1868-94), மீண்டும் சிறீ சாமராசேந்திர பூங்கா எனப் பெயரிடப்பட்டது [5]
பூங்காவில் உள்ள இயற்கைச்சூழல், பாறை, மரங்களின் தடிமன், பாரிய மூங்கில், விரிவாக்கப்பட்ட புல்வெளி, பூச்செடிகள், அதன் எல்லைக்குள் உள்ள நினைவுச்சின்னங்களுடன் காண்போரைக் கவர்கின்றன. இது கர்நாடக அரசின் தோட்டக்கலைத் துறையால் நிர்வகிக்கப்படுகிறது. பூங்காவிற்குள் நன்கு அமைக்கப்பட்ட நடைபாதைகளில் நடக்க அதிகாலை நடைபயிற்சி செய்பவர்களும் அமைதியான இயற்கை சூழலில் தாவரங்களைப் படிக்கும் இயற்கை ஆர்வலர்களும் அடிக்கடி வருகின்றனர்.[5] பெங்களூரு நகரில் உள்ள இந்த பூங்காவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இந்த நகரத்திற்கு 'தோட்டங்களின் நகரம்' என்று புனைபெயர் சூட்டியுள்ளனர்.[6]