ஓவர்லார்ட் நடவடிக்கை
From Wikipedia, the free encyclopedia
ஓவர்லார்ட் நடவடிக்கை (Operation Overlord) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த நேச நாட்டு போர் நடவடிக்கை. பிரான்சின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் நிகழ்ந்த இப்படையெடுப்புக்கு ஓவர்லார்ட் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. சூன் 6, 1944ல் தொடங்கிய நார்மாண்டி படையிறக்கம் முதல் ஆகஸ்ட் 24ல் பாரிசு நகரம் வீழ்ந்தது வரையான நிகழ்வுகள் ஓவர்லார்ட் நடவடிக்கை எனக் கருதப்படுகின்றன.
ஓவர்லார்ட் நடவடிக்கை | |||||||
---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின் பகுதி | |||||||
நார்மாண்டி கடற்கரையில் தரையிறங்கும் நேச நாட்டுப் படைகள் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
நேச நாடுகள்
ஐக்கிய அமெரிக்கா | ஜெர்மனி | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
டுவைட் டி. ஐசனாவர் பெர்னார்ட் மோண்ட்கோமரி ஒமார் பிராட்லி டிராஃபர்ட் லீக்-மல்லோரி ஆர்தர் டெட்டர் மைல்ஸ் டெம்சி பெர்ட்ராம் ராம்சே | கெர்ட் வோன் ரன்ஸ்டெட் எர்வின் ரோம்மல் |
||||||
பலம் | |||||||
1,452,000 (25 சூலை) 2,052,299 (21 ஆகஸ்ட்) | 380,000 (25 சூலை) – 1,000,000+) 2,200 – ~2,300 டாங்குகள், பீரங்கிகள் |
||||||
இழப்புகள் | |||||||
226,386 பேர் 4,101 வானூர்திகள் ~4,000 டாங்குகள் | 209,875 – 450,000 பேர் 2,127 வானூர்திகள் ~2,200 டாங்குகள், பீரங்கிகள் |
||||||
13,632–19,890 பிரெஞ்சு பொது மக்கள் |
ஓவர்லார்ட் நடவடிக்கை என்ற குறியீடு நார்மாண்டி படையிறக்கம் மற்றும் நார்மாண்டி படையெடுப்பு, டி-டே போன்ற நிகழ்வுகளில் இருந்து வேறுபட்டது. பிரான்சு மீதான ஒட்டு மொத்த படையெடுப்பு நிகழ்வு ஓவர்லார்ட் நடவடிக்கை எனப்படுகிறது. இது சூன் 6 முதல்-ஆகஸ்ட் 25 வரை நடந்த மொத்த நடவடிக்கைகளைக் குறிக்கிறது. இதன் ஆரம்ப கட்ட தரையிறக்கம் ”நார்மாண்டி படையிறக்கம்” அல்லது ”நெப்டியூன் நடவடிக்கை” என்றும் இது நிகழ்ந்த நாளான சூன் 6, 1944 ”டி-டே” என்றழைக்கப்படுகிறது. ”நார்மாண்டி படையெடுப்பு” என்னும் பெயர் இந்த படையிறக்கமும் அதன் பின்னர் நார்மாண்டிப் பகுதியினைக் கைப்பற்ற சூலை மாத பாதி வரை நடந்த சண்டைகளையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
1940 முதல் நான்கு ஆண்டுகளாக நாசி ஜெர்மனியின் பிடியிலிருந்த மேற்கு ஐரோப்பாவை மீட்பதற்கு 1944ல் நேச நாடுகள் அதன்மீது படையெடுக்கத் திட்டமிட்டன. இது உலக வரலாற்றிலேயே நிகழ்ந்த மிகப்பெரும் நீர்நிலப் படையெடுப்பாகும். இதில் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நேச நாடுகளின் படைகளுடன், ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து, நார்வே, போலந்து, லக்சம்பர்க், செக்கஸ்லோவாக்கியா போன்ற நாடுகளின் நாடு கடந்த அரசுப் படைகளும் (விடுதலைப் படைகள்) கலந்து கொண்டன. படையெடுப்பு நிகழும் இடம், நேரம் ஆகியவற்றை ஜெர்மானியர்கள் கணிக்காமல் இருக்க பல திசைதிருப்பும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஜெர்மானியப் போர்த் தலைமையகத்துள் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டாலும், உத்தி முடிவுகளில் இட்லரின் தலையீட்டாலும் ஜெர்மானியர்களால் படையெடுப்பைத் தடுக்க சரியான முயற்சிகளை மேற்கொள்ள இயலவில்லை.
சூன் 6, 1944ல் இப்படையெடுப்பு தொடங்கியது. ஒன்றரை மாத கால கடும் சண்டைக்குப் பின்னர் நார்மாண்டி கடற்கரை முழுவதும் நேச நாட்டுப் படைகளின் வசமாகின. இச்சண்டைகளில் அமெரிக்க படைகளுக்கான இலக்குப் பகுதிகள் எளிதில் கைப்பற்றப்பட்டுவிட்டன. ஆனால் பிரிட்டானிய மற்றும் கனடிய இலக்குப் பகுதியான கன் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியில் கடுமையான சண்டை நிகழ்ந்தது. சூலை இறுதியில் அமெரிக்கப்படைகள் நார்மாண்டியைச் சுற்றியிருந்த ஜெர்மானியப் படை வளையத்தை உடைத்து பிரான்சின் உட்பகுதியை நோக்கி முன்னேறத் தொடங்கின. இதனைத் தடுக்க ஜெர்மானியர்கள் மேற்கொண்ட எதிர்த்தாக்குதல்கள் தோல்வியடைந்தன. செய்ன் ஆற்றுக்கு மேற்கிலிருந்த ஜெர்மானியப் படைகளில் பெரும்பகுதி ஃபலேசு இடைப்பகுதியில் சுற்றி வளைக்கப்பட்டு அழிக்கப்பட்டது. ஆகஸ்ட் 25 அன்று பிரான்சுத் தலைநகர் பாரிசு விடுவிக்கப்பட்டது. மேற்கு பிரான்சில் எஞ்சிய ஜெர்மானியப் படைகள் செய்ன் ஆற்றைக் கடந்து பின்வாங்கின. இவ்வாறு ஓவர்லார்ட் நடவடிக்கை நேச நாடுகளுக்கு பெரும் வெற்றியாக முடிவடைந்தது.