![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/30/Flag_of_the_Orchha_State.svg/langta-640px-Flag_of_the_Orchha_State.svg.png&w=640&q=50)
ஓர்ச்சா சமஸ்தானம்
From Wikipedia, the free encyclopedia
ஓர்ச்சா இராச்சியம் (Orchha State)[1]இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது மத்திய இந்தியாவின் புந்தேல்கண்ட் பகுதியில், தற்கால மத்தியப் பிரதேச மாநிலத்தின் திகம்கர் மாவட்டம் மற்றும்நிவாரி மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. இந்த இராச்சியத்தை இராசபுத்திர குலத்தினர் ஆட்சி செய்தனர். [2] இதன் தலைநகரகளாக ஓர்ச்சா மற்றும் திகம்கர் நகரங்கள் இருந்தது. ஓர்ச்சாவில் சதுர்புஜக் கோயிலை நிறுவியவர் ஓர்ச்சா இராணி ஆவார்.[3]ஓர்ச்சா கோட்டை வளாகம் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. முடியாட்சியுடன் விளகிய ஓர்ச்சா இராச்சியம் 1811-ஆம் ஆண்டில் பிரித்தானிய கம்பெனி ஆட்சியின் கீழ் இருந்த புந்தேல்கண்ட் முகமையின் கீழ் சுதேச சமஸ்தான ஆகியது. இந்திய விடுதலைக்குப் பின்னர் ஓர்ச்சா இராச்சியம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் திகம்கர் மாவட்டம் & நிவாரி மாவட்டங்களாக உள்ளது.
ஓர்ச்சா இராச்சியம் | ||||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
![]() | ||||||
தலைநகரம் | ஓர்ச்சா, திகம்கர் | |||||
வரலாறு | ||||||
• | நிறுவப்பட்டது | 1531 | ||||
• | 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் | 1950 | ||||
பரப்பு | ||||||
• | 1908 | 5,400 km2 (2,085 sq mi) | ||||
Population | ||||||
• | 1908 | 321,364 | ||||
மக்கள்தொகை அடர்த்தி | Expression error: Unrecognized punctuation character ",". /km2 (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi) | |||||
தற்காலத்தில் அங்கம் | திகம்கர் மாவட்டம் & நிவாரி மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா |
1908-ஆம் ஆண்டில் ஓர்ச்சா இராச்சியம் 5,400 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 3,21,364 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 15 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .