![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5b/OrchhaPalace.jpg/640px-OrchhaPalace.jpg&w=640&q=50)
புந்தேல்கண்ட்
From Wikipedia, the free encyclopedia
புந்தேல்கண்ட் அல்லது பந்தேல்கண்ட் (Bundelkhand) மத்திய இந்தியாவின் புவியியல் பகுதிகளில் ஒன்றாகும். மலைத்தொடர்களால் சூழ்ந்த புந்தேல்கண்ட் பகுதிகள் மத்திய இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மற்றும் மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களை பிரிக்கிறது. புந்தேல்கண்ட் பகுதியின் பெரும்பாலான பகுதிகள் மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற கஜுராஹோ கோயில்கள் இப்பகுதியில் உள்ளது.
புந்தேல்கண்ட்
बुन्देलखण्ड | |
---|---|
புவியியல் பகுதி | |
![]() ஜஹாங்கீர் அரண்மனை, ஓர்ச்சா | |
![]() இந்தியாவில் புந்தேல்கண்ட் | |
நாடு | ![]() |
இனம் | புந்தேல்கண்டி |
மொழிகள் | |
• முக்கிய மொழிகள் | புந்தேலி மொழி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
• கோடை (பசேநே) | +05:30 |
அரச குலங்கள் | இராஜபுத்திர சந்தேலர்கள் |
தலைநகரங்கள் | கஜுராஹோ கலிஞ்சர் மகோபா ஓர்ச்சா கர்குந்தர் |
முடியாட்சிகள் | ஜுஜௌதி (1446) ஓர்ச்சா (1501), ததியா பன்னா (1732), அஜய்கர் (1765), பெஜவார் (1765), சர்க்காரி சம்தார் சரிலா |
புந்தேல் கண்ட் பகுதி வறண்ட வானிலை கொண்ட, நீர் ஆதாரம் குறைந்த மலைப்பாங்கான காடுகளுடன் கூடிய மேட்டு நிலங்களாகும். சந்தேலர்கள் போன்ற பழங்குடி மக்கள் நிறைந்த புந்தேல்கண்ட் பகுதியினை மேம்படுத்தப்பட்ட புந்தேல்கண்ட் தனி மாநிலமாக பிரிக்க புந்தேல் கண்ட் பகுதியில் வாழும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புந்தேல் கண்ட் பகுதிகளில் புந்தேலி மற்றும் இந்தி மொழி பேசுகின்றனர்.
சந்தேலர்கள் இப்பகுதியை கி.பி. பத்தாம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு வரை புந்தேல்கண்ட் பகுதியை ஆண்டனர்.