ஊடல்
From Wikipedia, the free encyclopedia
ஊடல் என்பது பிணக்கிக்கொள்ளும் ஒருவகை நடத்தைப் பாங்கு. இது உளவியல் அடிப்படையில் தோன்றுகிறது. மேலைநாட்டு நடத்தை அறிவியல் இதனைப் பல்வேறு கோணங்களில் பகுத்தாய்கிறது. நடத்தையியல் மேலைநாடுகளில் 19 ஆம் நூற்றாண்டில் உருவானது. தமிழில் இந்த அறிவியல் கலை கிறித்துவுக்கு முன்பே தோன்றி வளர்ந்துள்ளது. தொல்காப்பியர் இதனை மெய்ப்பாட்டியல் என்னும் தலைப்பின் கீழ் விளக்கியுள்ளார்.
உடலுறவு வாழ்க்கையில் ஊடல் இன்பம் தரும். எப்போது எனில் அந்த ஊடுதல் கூடித் தழுவுவதில் முடியவேண்டும். [1]