இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2018
From Wikipedia, the free encyclopedia
உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் இலங்கையில் 2018 பெப்ரவரி 10 இல் இடம்பெற்றன.[3][4] இத்தேர்தலில் 15.8 மில்லியன் வாக்காளர்கள் 341 உள்ளூராட்சி சபைகளில் (24 மாநகராட்சிகள், 41 நகரசபைகள், 276 பிரதேச சபைகள்) இருந்து 8,356 உறுப்பினர்களைத் தெரிவு செய்தனர்.[5][6][7] அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்கள் இலங்கையில் ஒரே நாளில் நடத்தப்பட்டமை இதுவே முதற் தடவையாகும்.[6][8] இத்தேர்தலில் முதற்தடவையாக கலப்பு தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 60% உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 40% உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர்.[9][10]
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
341 உள்ளாட்சி மன்றங்களில் இருந்து 8,356 உறுப்பினர்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
இத்தேர்தல்களில் 70% வாக்களித்தனர். பெரும் வன்முறைகள் எதுவுமின்றி வாக்களிப்புகள் இடம்பெற்றன.[11][12][13] முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் இலங்கை பொதுசன முன்னணி பெரும்பான்மையான சபைகளைக் கைப்பற்றியது.