காலச்சூரி மன்னன் From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் கோகல்லன் (Kokalla II; ஆட்சிக் காலம் பொ.ச. 990-1015 ) மத்திய இந்தியாவில் திரிபுரியை ஆண்ட திரிபுரி காலச்சூரி வம்சத்தின் ஆட்சியாளனாவான். இவனது இராச்சியம் சேதி நாடு அல்லது தஹாலா பகுதியை (இன்றைய மத்தியப் பிரதேசம்) மையமாகக் கொண்டிருந்தது. இவனது குர்கி கல்வெட்டு, இவன் கூர்ஜர-பிரதிகாரர்கள், பாலர்கள், கமேலைச் சாளுக்கியர்களின் பிரதேசங்களைத் தாக்கியதாகக் கூறுகிறது.
இரண்டாம் கோகல்லன் | |
---|---|
தஹாலாவின் மன்னன் | |
ஆட்சிக்காலம் | சுமார் 990-1015 பொ.ச. |
முன்னையவர் | இரண்டாம் யுவராசதேவன் |
பின்னையவர் | கங்கேயதேவன் |
குழந்தைகளின் பெயர்கள் | கங்கேயதேவன் |
அரசமரபு | திரிபுரியின் காலச்சூரிகள் |
தந்தை | இரண்டாம் யுவராசதேவன் |
கோகல்லன், காலச்சூரி மன்னன் இரண்டாம் யுவராசதேவனின் மகனாவான். தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு அரியணையில் அமர்த்தப்பட்டான்.[1]
கோகல்லனின் குர்கி கல்வெட்டு, மற்ற மன்னர்கள் இவனைப் பார்த்து பயந்தார்கள் என்று பெருமை பேசுகிறது: கூர்ஜர மன்னன் இமயமலையில் ஒளிந்து கொண்டான் எனவும், கௌட மன்னன் நீர் கோட்டையில் ஒளிந்தான் எனவும், குந்தள மன்னன் காட்டில் வாழ்ந்தான் எனவும் கூறுகிறது. இந்த கூற்றுக்கள், கோகல்லன் இந்த பிரதேசங்களை தாக்கியிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது: [1]
கோகல்லனின் வழித்தோன்றலான யசகர்ணனின் ஜபல்பூர் மற்றும் கைரா கல்வெட்டுகள், கோகல்லன் நான்கு பெருங்கடல்களை அடையும் வரை நான்கு திசைகளிலும் நாடுகளை தாக்கியதாக பெருமை கொள்கிறது. இது வெறும் வழமையான பாராட்டு என்றே தோன்றுகிறது. [1]
பரமாரர்களின் உதய்பூர் கல்வெட்டு, அவர்களின் மன்னன் போஜன் ஒரு தோக்லாலாவை தோற்கடித்ததாக கூறுகிறது. [2] வரலாற்றாசிரியர் எஸ். கே. போஸ் தோக்லாலாவை இரண்டாம் கோகல்லனுடன் அடையாளப்படுத்துகிறார். [3] கோகல்லனுக்குப் பிறகு அவனது மகன் கங்கேயதேவன் பதவியேற்றான். இவன் தனது ஆட்சியின் முதல் சில ஆண்டுகளில் போஜனின் ஆட்சியாளனாக பணியாற்றினான். [4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.