இசுகைல்லா
கிரேக்க புராணங்களில் தோன்றும் ஒரு அரக்கி / From Wikipedia, the free encyclopedia
இசுகைல்லா ( Scylla ) என்பது கிரேக்க புராணங்களில் தோன்றும் ஒரு அரக்கியாவாள். ஒரு குறுகிய நீர் கால்வாயின் ஒரு பக்கத்தில், தனது தோழியான சாரிப்டிசு என்பவளுடன் வாழ்கிறாள். கால்வாயின் இரண்டு பக்கங்களும் ஒன்றுக்கொன்று அம்புக்குறி போல இருக்கும். சாரிப்டிசை சந்திப்பதைத் தவிர்க்க முயற்சிக்கும் மாலுமிகள் இசுகைல்லா இருக்கும் வழியில் ஆபத்தான முறையில் கடந்து செல்வார்கள்.
இசுகைல்லா முதன்முதலில் ஓமரின் ஒடிசியில் தோன்றினாள். அங்கு ஒடிசியசு மற்றும் அவரது குழுவினர் இவளையும் சாரிப்டிசையும் தங்கள் பயணங்களில் சந்திக்கின்றனர். பிற்கால புராணம் ஒரு அழகான கன்னி போன்ற தோற்றக் கதையை இவளுக்கு வழங்குகிறது. பின்னர் இவள் ஒரு அரக்கியாக மாறுகிறாள். [1]
வேர்ஜிலின் இதிகாசமான அனீட் என்ற நூலில் [2] தெற்கு இத்தாலியின் ஒரு பகுதியான கலபிரியா மற்றும் சிசிலிக்கு இடையே உள்ள மெசினா காய்வாயுடன் இசுகைல்லா வசிக்கும் கால்வாயை தொடர்புபடுத்துகிறது. கலபிரியாவில் உள்ள கடலோர நகரமான இசுகில்லா, இசுகைல்லாவின் புராண உருவத்திலிருந்து அதன் பெயரைப் பெற்றது. மேலும் இது கன்னியின் வீடு என்று கூறப்படுகிறது.
“இசுகைல்லா மற்றும் சாரிப்டிசு இடையே” என்ற பழமொழியானது இதேபோன்ற இரண்டு ஆபத்தான சூழ்நிலைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் என்று பொருள்படும்.