ஆதித்த சோழன்
சோழ மன்னர் / From Wikipedia, the free encyclopedia
ஆதித்த சோழன் (பொ.ஊ. 871–907), கோப்பரகேசரி விசயாலய சோழனின் மகன். இவனும் தன் தந்தையுடன் திருப்புறம்பிய போரில் பங்குபற்றினான். பல்லவ மன்னன் அபராசித வர்மனை கொன்று தொண்டை நாட்டை கைப்பற்றினான். இவன் காலத்தில் சோழ அரசு சிற்றரசு நிலையில் இருந்து விடுபட எத்தனித்தது.[1]
விரைவான உண்மைகள் ஆதித்த சோழன், ஆட்சிக்காலம் ...
ஆதித்த சோழன் | |
---|---|
ஆட்சிக்காலம் | பொ.ஊ. 870/1–907 |
முன்னையவர் | விசயாலய சோழன் |
பின்னையவர் | முதலாம் பராந்தக சோழன் |
பிறப்பு | ஆண்டு தெரியவில்லை தஞ்சாவூர் |
இறப்பு | கிபி 907 |
அரசி | திரிபுவனமாதேவியார் |
குழந்தைகளின் பெயர்கள் | முதலாம் பராந்தக சோழன் |
தந்தை | விசயாலய சோழன் |
தாய் | அனகாவதி |
மூடு
மேற்கே சகயாத்திரிமலை முதல் கிழக்கே கீழ்க்கடல் வரை காவிரியின் இரு கரைகளிலும் எண்ணற்ற சிவாலயங்களைக் கட்டுவித்தான் ஆதித்தன் என்று சுந்தர சோழன் காலத்து அன்பில் செப்பேடுகள் கூறுகின்றன. ஆதித்தன் காலத்தில் மண்டளிகள் பல கற்றளிகளாக மாற்றியமைக்கப்பட்டன என்றும் இவன் காலத்தில் சுமார் 50 கோயில்கள் வரை கட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகின்றது.