![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a1/Chola_flag.png/640px-Chola_flag.png&w=640&q=50)
விசயாலய சோழன்
சோழ மன்னர் / From Wikipedia, the free encyclopedia
பண்டைத் தமிழகத்தில் மூவேந்தர்களுள் ஒருவராகப் பெரும் புகழுடன் விளங்கிய சோழர்கள் நிலை தாழ்ந்து சிற்றரசர்களாக நீண்டகாலம் இருந்தனர். இந்த நிலையைப் போக்கி சோழரின் பெருமையை மீண்டும் தமிழகத்தில் நிலை நிறுத்தியவர் கோப்பரகேசரி வர்மன் விசயாலய சோழன் ஆவார். ஒற்றியூரை ஆண்டு வந்த ஶ்ரீ கண்ட சோழனின் மகனான விஜயாலய சோழன் பொ.ஊ. 847இல் சிற்றரசராக உறையூரில் பதவி ஏற்றார். இவரே பிற்கால சோழப் பேரரசிற்கான வலிமையான அடித்தளத்தை இட்டவர். பொ.ஊ. 880ல் நடந்த திருப்புறம்பியப் போரில் அக்காலத்தில் வலிமை பெற்றிருந்த பாண்டியர்களுக்குள் இருந்த உட்பகையைப் பயன்படுத்தி முத்தரையர்களின் கீழிருந்த தஞ்சாவூரைத் தாக்கி, பல்லவ பேரரசிற்கு சார்பாக போரிட்டு தஞ்சையை கைப்பற்றினார். இதற்க்கு பின்னர் 250 வருடம் தஞ்சாவூர் சோழர்களின் தலைநகராக விளங்கியது.
விரைவான உண்மைகள் விசயாலய சோழன், ஆட்சிக்காலம் ...
விசயாலய சோழன் | |
---|---|
பரகேசரி | |
ஆட்சிக்காலம் | அண். 847 – அண். 871 CE |
இராணுவப் பணி | |
சேவை/ | ![]() பல்லவ ஆளுநர் (கி.பி. 847 – 860) |
முன்னையவர் | சூராதிராச சோழன் |
பின்னையவர் | ஆதித்த சோழன் |
பிறப்பு | ஒற்றியூர் (திருவொற்றியூர்) |
இறப்பு | ஏறக்குறைய கி.பி 884 ஸ்ரீகாளஹஸ்தி |
குழந்தைகளின் பெயர்கள் | ஆதித்த சோழன் |
தந்தை | ஒற்றியூர் ஶ்ரீ கண்ட சோழன் |
மதம் | சைவ சமயம் |
மூடு