ஆதித்த கரிகாலன்
சோழ மன்னர் / From Wikipedia, the free encyclopedia
ஆதித்த கரிகாலன் (Aditha Karikalan) சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம் இராசராசனின் தமையனும் சுந்தர சோழரின், வானவன் மாதேவி மகனுமாவான்.
விரைவான உண்மைகள் ஆதித்த கரிகாலன், சோழப் பேரரசின் இணை ஆட்சியாளர் ...
ஆதித்த கரிகாலன் | |
---|---|
வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி வர்மன் | |
சோழப் பேரரசின் இணை ஆட்சியாளர் | |
ஆட்சிக்காலம் | பொ.ஊ. 966–971 |
பேரரசர் | சுந்தர சோழன் |
முன்னையவர் | சுந்தர சோழன் |
பின்னையவர் | உத்தம சோழன் |
பிறப்பு | ஆதித்த கரிகாலன் திருக்கோயிலூர், சோழர் (தற்கால தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | பொ.ஊ. 971 (29 வயதில்) மேலக்கடம்பூர், சோழ நாடு |
துணைவர் | இலாத மாதேவியார் |
குழந்தைகளின் பெயர்கள் | கரிகால கண்ணன் |
அரசமரபு | சோழர் |
தந்தை | சுந்தர சோழன் |
தாய் | வானவன் மாதேவி |
மதம் | சைவ சமயம் |
மூடு
ஆதித்தன் சிறுவனாய் இருந்த பொழுதே சிங்கம் யானையுடம் போரிடுவதைப் போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட செய்த கண்டராதித்தனின் முயற்சிகளைத் தகர்த்து தன்னுரிமையுடன் வாழ்ந்து வந்த வீரபாண்டியனுடன் போரிட்டதாக லெய்டன் பட்டயங்கள் புகழ்கின்றன. புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்த கரிகாலனது வீரம் வெளிப்பட்டதோடு, வீரபாண்டியன் தலைகொண்ட என்று கூறிக்கொள்ளவும் இவனுக்கு வாய்ப்பைக் கொடுத்தது. வீரபாண்டியன் ஆதித்தனால் கொல்லப்பட்டதாகத் திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன.