அ. சேசையா சாத்திரி
From Wikipedia, the free encyclopedia
சர் அமராவதி சேசையா சாத்திரி (Sir Amaravati Seshayya Sastri) (1828 மார்ச் 22 - 1903 அக்டோபர் 29), இவர் ஓர் இந்திய நிர்வாகி ஆவார். இவர் திருவிதாங்கூர் திவானாக 1872 மே முதல் 1877 மே 4, வரை பணியாற்றினார். மேலும் 1878 முதல் 1894 வரை புதுக்கோட்டை சமஸ்தானத்தின் திவானாகவும் பணியாற்றினார். புதுக்கோட்டை நகரத்தை நவீனமயமாக்கிய பெருமை இவருக்கு உண்டு.
அமராவதி சேசையா சாத்திரி | |
---|---|
அ. சேசையா சாத்திரியின் உருவப்படம்' | |
புதுக்கோட்டையின் திவான் | |
பதவியில் 1878–1894 | |
ஆட்சியாளர்கள் | இராமச்சந்திர தொண்டைமான் (1878-1886), மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் (1886-1894) |
பின்னவர் | ஆர். வேதாந்தாச்சார்லு |
திருவிதாங்கூரின் திவான் | |
பதவியில் 1872 மே – 1877 | |
ஆட்சியாளர் | ஆயில்யம் திருநாள் |
முன்னையவர் | டி. மாதவ ராவ் |
பின்னவர் | நாணு பிள்ளை |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1828-03-22)22 மார்ச்சு 1828 தஞ்சாவூர், சென்னை மாகாணம், இந்தியா |
இறப்பு | 29 அக்டோபர் 1903(1903-10-29) (அகவை 75) சென்னை மாகாணம், இந்தியா |
தேசியம் | பிரிட்டிசு இந்தியா |
துணைவர் | சுந்தரி |
முன்னாள் கல்லூரி | சென்னைப் பல்கலைக்கழகம் |
வேலை | வழக்கறிஞர், நிர்வாகி |
தொழில் | அரசியல்வாதி |
சேசையா சாஸ்திரி 1828 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி என்ற கிராமத்தில் ஒரு ஏழை இந்து குடும்பத்தில் பிறந்தார். தனது ஒன்பது வயதில், இவர் தனது மாமா கோபால ஐயருடன் சென்னை நகரத்திற்கு குடிபெயர்ந்தார். சேசையா சாதிதிரி சென்னையில் தனது கல்வியைக் கற்றார். மேலும் 1848இல் முதல் வகுப்பில் பட்டம் பெற்றார்.
1848 ஆம் ஆண்டில், இவர் வருவாய் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் வட்டாச்சியர், தலைமை சிரஸ்தார் போன்ற பணிகளை அடைந்தார். 1872 ஆம் ஆண்டில், இவர் திருவிதாங்கூரின் திவானாக நியமிக்கப்பட்டு 1872 முதல் 1877 வரை பணியாற்றினார். அப்போது அரண்மனை சூழ்ச்சிகள் இவரை வெளியேற நிர்பந்தித்தன. இவர் 1878 முதல் 1886 வரை புதுக்கோட்டையின் திவானாகவும், 1886 முதல் 1894 வரை திவான்-அரசப் பிரதிநிதியாகவும் பணியாற்றினார். புதுக்கோட்டை நகரத்தை மீண்டும் கட்டியெழுப்பி புதுக்குளம் ஏரியை உருவாக்கினார். சேசைய்யா சாத்திரி 1894 இல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 1903 அக்டோபர் 29 அன்று தனது 75 வயதில் இறந்தார்.
இவர் 1902 ஆம் ஆண்டில் இந்தியப் பேரரசின் ஒழுங்கு என்று கௌவரவிக்கபட்டார்.