அவந்திபோரா
From Wikipedia, the free encyclopedia
அவந்திபோரா (Awantipora) அல்லது அவந்திபூர் [1] அல்லது அவாந்திபூர், [2] காஷ்மீரியில் ஊந்த்பூர் எனவும் அழைக்கப்படும் இது, இந்தியாவின் ஒன்றியப் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜீலம் ஆற்றங்கரையிலுள்ள ஒரு நகரமாகும். இது ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் (இப்போது தேசிய நெடுஞ்சாலை 44 என அழைக்கப்படுகிறது) ஸ்ரீநகருக்கு தெற்கிலும், அனந்தநாக்கின் வடக்கிலும் உள்ளது. அவந்திபோராவுக்கு காஷ்மீர் மன்னர் அவந்திவர்மனின் பெயரிடப்பட்டது. மேலும் அவர் கட்டிய 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு இந்துக் கோவில்களின் இடிபாடுகள் இன்றும் உள்ளன.
விரைவான உண்மைகள் அவந்திபோரா ஊந்த்பூர்அவந்திபூர், அவாந்திபூர்,, நாடு ...
அவந்திபோரா
ஊந்த்பூர் அவந்திபூர், அவாந்திபூர், | |
---|---|
நகரம் | |
அவந்திசுவாமி கோயில் இடிபாடுகள் | |
ஆள்கூறுகள்: 33.9232602°N 75.012846°E / 33.9232602; 75.012846 | |
நாடு | ![]() |
ஒன்றியப் பகுதி | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | புல்வாமா |
ஏற்றம் | 1,582 m (5,190 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 6,250 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | ஜேகே13 |
பாலின விகிதம் | ♂/♀ |
இணையதளம் | pulwama |
மூடு
அவந்திபோரா வட்டமானது புல்வாமா மாவட்டத்தின் துணைப்பிரிவாகும். [3] இது காஷ்மீரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. [4]