அல்தான்தூயா சாரிபூ
From Wikipedia, the free encyclopedia
அல்தான்தூயா சாரிபூ அல்லது அல்தான்தூயா சாரிபூ பாயாஸ்காலன் (Altantuyaa Shaariybuu Bayasgalan) (பிறப்பு: பிப்ரவரி 2, 1979 இறப்பு: அக்டோபர் 18, 2006) என்பவர் மலேசியாவில் கொலை செய்யப்பட்ட ஒரு மங்கோலியா அழகி.[2] அவருடைய உடல், இராணுவம் பயன்படுத்தும் C-4 ரக வெடிமருந்துகளால் வெடி வைத்துச் சிதறல் செய்யப்பட்ட பின்னர், சிலாங்கூர், ஷா ஆலாம், சுபாங், புஞ்சாக் ஆலாம் நீர்த்தேக்கத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது.[3]
அல்தான்தூயா சாரிபூ Altantuyaa Shaariibuu 俺答绥一的啥啊里布欧 | |
---|---|
பிறப்பு | அல்தான்தூயா சாரிபூ பாயாஸ்காலன் 26 பிப்ரவரி 1979 ![]() |
இறப்பு | 18 அக்டோபர் 2006 சிலாங்கூர், ஷா ஆலாம், சுபாங், புஞ்சாக் நியாகா நீர்த்தேக்கம் |
இறப்பிற்கான காரணம் | கொலை |
இருப்பிடம் | உலான் பத்தூர், மங்கோலியா |
தேசியம் | மங்கோலியர் |
பணி | பன்மொழி மொழிபெயர்ப்பாளர் |
அறியப்படுவது | உயர்மட்டப் பிரபலங்கள் தொடர்புடைய கொலை |
பெற்றோர் | தந்தை சாரிபூ செத்தெவ் (63) தாயார் எஸ்.அல்தான்செத்தெக் |
வாழ்க்கைத் துணை | இருமுறை திருமணம் |
பிள்ளைகள் | இரு ஆண் மகன்கள் அதான்சகாய் (10) முங்குன்சகாய் (16)[1] |
அல்தான்தூயா கொலைச் சம்பவத்தில், மலேசியாவின் உயர்மட்டப் பிரபலங்கள் தொடர்பு படுத்தப்பட்டனர்.[4] அந்த வகையில், அப்போதைய துணைப்பிரதமரும், தற்காப்பு அமைச்சரும், இப்போதைய பிரதமருமான நஜீப் துன் ரசாக்கின் பெயரும் தொடர்பு படுத்தப்பட்டது.[5] எனினும் அதை அவர் வன்மையாக மறுத்துவிட்டார்.[6] இதுவரையிலும் மறுத்தும் வருகிறார்.[7]
ஷா ஆலாம் உயர்நீதிமன்றத்தில் 165 நாட்கள் நடைபெற்ற அல்தான்தூயா கொலைவழக்கில், அரசு தரப்பில் 84 பேரும், எதிர்தரப்பில் 198 பேரும் விசாரணை செய்யப்பட்டனர்.[8] 433 சாட்சிப் பொருள்கள் காட்சிப் பொருள்களாகப் பயன்படுத்தப்பட்டன.[9][10] இந்த வழக்கு மலேசியாவிலும் அனைத்துலக ரீதியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மலேசிய நீதித் துறைக்கு ஒரு சவாலாகவும் அமைந்தது.[11]