அறுபடைவீடுகள்
தமிழ்க் கடவுளான முருகனுடைய ஆறு கோயில்கள் / From Wikipedia, the free encyclopedia
தமிழ்நாட்டில், இந்து சமயக் கடவுள்களில், தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள், ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன. அவை:
- திருப்பரங்குன்றம் (மதுரை மாவட்டம்)
- திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய் (தூத்துக்குடி மாவட்டம்)
- திருவாவினன்குடி (எ) பழனி (திண்டுக்கல் மாவட்டம்)
- திருவேரகம் (எ) சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் (தஞ்சாவூர் மாவட்டம்)
- திருத்தணி அல்லது குன்றுதோறாடல் (திருவள்ளூர் மாவட்டம்)
- பழமுதிர்சோலை (மதுரை மாவட்டம்)