அம்புபாச்சி மேளா
From Wikipedia, the free encyclopedia
அம்புபாச்சி மேளா (Ambubachi Mela) என்பது அசாமின் குவகாத்தியிலுள்ள காமாக்யா கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்து மேளாவாகும்.[1] இது மழைக்காலங்களில் கொண்டாடப்படுகிறது. இது அசாமி மாதமான ஆடியில், சூன் மாத நடுப்பகுதியில் மிதுன ராசியில் சூரியன் கடக்கும் போது, பிரம்மபுத்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு இருக்கும் போது கொண்டாடப்படுகிறது.[2][3][4] இது காமாக்யா தெய்வத்தின் மாதவிடாய் நாளில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்டமாகும். கோயிலின் முதன்மை தெய்வம், தேவி காமக்யா ஆகும். அன்னை சக்தி, இந்த கால இடைவெளியில் தனது மாதவிடாய் சுழற்சியின் வருடாந்திர சுழற்சியைக் கடந்து செல்கிறது என்று நம்பப்படுகிறது. பருவமழை காலத்தில், அன்னை பூமியின் 'மாதவிடாயின்' படைப்பு மற்றும் வளர்க்கும் சக்தியானது இந்த மேளாவின் போது பக்தர்களுக்கு அணுகக்கூடியதாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. தலைமை தெய்வத்தின் சிலை இல்லை, ஆனால் அவள் யோனி போன்ற கல் வடிவில் வணங்கப்படுகிறாள். அதற்கு பதிலாக ஒரு இயற்கை நீரூற்று பாய்கிறது.
அம்புபாச்சி மேளா | |
---|---|
கடைபிடிப்போர் | இந்துக்கள் |
வகை | மத விழா, நாட்டுப்புற விழா |
நாள் | சூன் மாத்தத்தின் நடுப்பகுதி |
நிகழ்வு | வருடாந்திரத் திருவிழா |