From Wikipedia, the free encyclopedia
அம்புபாச்சி மேளா (Ambubachi Mela) என்பது அசாமின் குவகாத்தியிலுள்ள காமாக்யா கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்து மேளாவாகும்.[1] இது மழைக்காலங்களில் கொண்டாடப்படுகிறது. இது அசாமி மாதமான ஆடியில், சூன் மாத நடுப்பகுதியில் மிதுன ராசியில் சூரியன் கடக்கும் போது, பிரம்மபுத்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு இருக்கும் போது கொண்டாடப்படுகிறது.[2][3][4] இது காமாக்யா தெய்வத்தின் மாதவிடாய் நாளில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்டமாகும். கோயிலின் முதன்மை தெய்வம், தேவி காமக்யா ஆகும். அன்னை சக்தி, இந்த கால இடைவெளியில் தனது மாதவிடாய் சுழற்சியின் வருடாந்திர சுழற்சியைக் கடந்து செல்கிறது என்று நம்பப்படுகிறது. பருவமழை காலத்தில், அன்னை பூமியின் 'மாதவிடாயின்' படைப்பு மற்றும் வளர்க்கும் சக்தியானது இந்த மேளாவின் போது பக்தர்களுக்கு அணுகக்கூடியதாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. தலைமை தெய்வத்தின் சிலை இல்லை, ஆனால் அவள் யோனி போன்ற கல் வடிவில் வணங்கப்படுகிறாள். அதற்கு பதிலாக ஒரு இயற்கை நீரூற்று பாய்கிறது.
அம்புபாச்சி மேளா | |
---|---|
கடைபிடிப்போர் | இந்துக்கள் |
வகை | மத விழா, நாட்டுப்புற விழா |
நாள் | சூன் மாத்தத்தின் நடுப்பகுதி |
நிகழ்வு | வருடாந்திரத் திருவிழா |
இந்த மேளா இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் நிலவும் தாந்த்ரீக சக்தி வழிபாட்டுடன் நெருக்கமாக தொடர்புடையதால் அமேதி அல்லது தாந்த்ரீக கருவுறுதல் திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது. சில தாந்த்ரீக பாபாக்கள் கூட இந்த நான்கு நாட்களில் மட்டுமே தங்கள் பொது தோற்றங்களை வெளிப்படுத்துகிறார்கள். மீதமுள்ள சமயங்களில், அவர்கள் தனிமையில் இருக்கிறார்கள். சில பாபாக்கள் தங்கள் தலையை ஒரு குழியில் போட்டு அதன் மீது நிமிர்ந்து நிற்பது, ஒரு காலில் ஒரு மணிநேரம் நீண்டு நிற்பது போன்ற மனநல சக்திகளைக் காண்பிப்பதைக் காணலாம்.[4]
திருவிழாவின் போது இந்த கோயில் மூன்று நாட்கள் மூடப்படுகிறது [2][3] .ஏனெனில் பாரம்பரிய பெண்கள் மாதவிடாய் தனிமைப்படுத்துவது போல மூன்று நாட்கள் தாய் பூமி அசுத்தமாகிவிடும் என்று நம்பப்படுகிறது. இந்த மூன்று நாட்களில் பக்தர்கள் சமைக்கக்கூடாது. பூஜை செய்யக்கூடாது. புனித நூல்களைப் படிக்கக்கூடாது. விவசாயம் செய்யக்கூடாது போன்ற சில கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன. மூன்று நாட்களுக்குப் பிறகு தேவி காமக்யா குளித்துவிட்டு, தனது தூய்மையை மீட்டெடுப்பதை உறுதி செய்ய பிற சடங்குகள் செய்யப்படுகின்றன. பின்னர் கோயிலின் கதவுகள் மீண்டும் திறக்கப்படுகின்றன [4] மற்றும் பிரசாதம் விநியோகிக்கப்படுகிறது. நான்காம் நாள் பக்தர்கள் கோயிலுக்குள் நுழைந்து தேவியை வணங்க அனுமதிக்கப்படுகிறார்கள். 2016 , 2017ஆம் ஆண்டுகளில் இந்தத் திருவிழா சூன் 22 முதல் 26 வரை இருந்தன.[5]
பிரசாதம் அங்கோடக் மற்றும் அங்கவத்திரம் (துண்டு) என இரண்டு வடிவங்களில் விநியோகிக்கப்படுகிறது. அங்கோடக் என்றால் உடலின் திரவப் பகுதி - நீரூற்றில் இருந்து வரும் நீர் மற்றும் அங்கவத்திரம் என்பது உடலை உள்ளடக்கிய துணி என்று பொருள் - மாதவிடாய் நாட்களில் கல் யோனியை மறைக்கப் பயன்படுத்தப்படும் சிவப்புத் துணியின் ஒரு பகுதியாகும்.[2]
இந்த விழாவை அனுசரிக்க ஒவ்வொரு ஆண்டும் சாதுக்களும், பொதுமக்களும், இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் குவகாத்திக்கு வருகிறார்கள். அவர்களில் சந்நியாசிகள்ம், கறுப்பு உடையணிந்த அகோரிகள், காதே-பாபாக்கள், மேற்கு வங்கத்தின் பாடும் வழிபோக்கர்கள், அறிவுஜீவிகள், நாட்டுப்புற தந்திரவாதிகள், சாதுக்கள் மற்றும் சாத்விகள் ஆகியோரும் அடங்குவர்.[2][4] வெளிநாட்டிலிருந்து கூட தாய் காமக்கியாவின் ஆசீர்வாதம் பெற வெளிநாட்டவர்கள் வருகிறார்கள்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.