![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cf/Bihar_Vibhuti_Dr_Anugrah_Narayan_Sinha%252Cfirst_Bihar_Dy_Chief_Minister.jpg/640px-Bihar_Vibhuti_Dr_Anugrah_Narayan_Sinha%252Cfirst_Bihar_Dy_Chief_Minister.jpg&w=640&q=50)
அனுக்ரா நாராயண் சின்கா
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
பீகார் விபூதி என்று அழைக்கப்படும் முனைவர் அனுக்ரா நாராயண் சின்கா (Dr. Anugrah Narayan Sinha) ( 1887 சூன் 18 - 1957 சூலை 5) இவர் ஓர் இந்திய தேசியவாத அரசியல்வாதியும், சம்பரண் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றவரும் மற்றும் காந்தியவாதியுமாவார். மேலும் இவர், நவீன பீகாரை கட்டமைத்தவர்களில் ஒருவராவார்.[1] பீகாரின் முதல் துணைத் முதல்வராகவும்,[2] பீகார் மாநிலத்தின் முதல் நிதியமைச்சராகவும் இருந்தார். (1946-1957).[3] மேலும், இவர் இந்திய அரசியலமைப்புச் நிர்ணய சபையின் உறுப்பினராகவும் இருந்தார். இவர் இந்திய அரசியலமைப்பை எழுதத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மேலும் அதன் முதல் நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினராக பணியாற்றினார். தொழிலாளர், உள்ளாட்சி, அரசு, பொதுப்பணி, வழங்கல் மற்றும் விலை கட்டுப்பாடு, சுகாதாரம் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட பல இலாகாக்களையும் இவர் வகித்தார்.[4]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/04/Anugrah_Narayan_Sinha_1988_stamp_of_India.jpg/640px-Anugrah_Narayan_Sinha_1988_stamp_of_India.jpg)
விரைவான உண்மைகள் முனைவர் அனுக்ரா நாராயண் சின்கா, பீகார் மாகாணத்தின் துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ...
முனைவர் அனுக்ரா நாராயண் சின்கா | |
---|---|
![]() | |
பீகார் மாகாணத்தின் துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் | |
பதவியில் 1937 சூலை 20 – 1939 அக்டோபர் 31 | |
முன்னையவர் | நிறுவப்பட்ட பதவி |
பின்னவர் | ஆளுநரின் ஆட்சி |
இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் | |
பதவியில் 1946 திசம்பர் 9 – 1950 சனவரி 26 | |
முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது |
பின்னவர் | பதவி நிறுத்தப்பட்டது |
தொகுதி | அவுரங்காபாத் |
பீகார் முதலாவது துணை முதல்வர் மற்றும் பீகார் நிதி அமைச்சர் | |
பதவியில் 1946 ஏப்ரல் 2 – 1957 சூலை 5 | |
முதல் அமைச்சர் | சிறி கிருட்டிணா சின்கா |
முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது |
பின்னவர் | எவருமில்லை |
மத்திய சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1926–1930 | |
தலைமை ஆளுநர் | தி ஏர்ல் ஆஃப் ஹாலிஃபாக்ஸ் |
முன்னையவர் | மகாராஜா ராமேசுவர் சிங் |
பின்னவர் | எவருமில்லை |
மத்திய சட்டமன்றத்தின் உறுப்பினர் | |
பதவியில் 1923–1926 | |
தலைமை ஆளுநர் | ஏர்ல் ஆப் ரீடிங் |
முன்னையவர் | அம்பிகா பிரசாத் சின்கா |
பின்னவர் | பத்ரி லால் ரஸ்தோகி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1887-06-18)18 சூன் 1887 அவுரங்காபாத், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்போது பீகார், இந்தியா) |
இறப்பு | 5 சூலை 1957(1957-07-05) (அகவை 70) பட்னா, பீகார், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிள்ளைகள் | இரு மகன்கள் |
முன்னாள் கல்லூரி | பாட்னா பலகலைகழகம் மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா |
வேலை | வழக்கறிஞர் தேசியவாதம் அரசியல்வாதி கல்வி நிர்வாகி |
புனைப்பெயர்(s) | பீகார் விபூதி, பாபுசாகேப் |
MERAY SANSMARAN | |
As of 12 July, 2006 மூலம்: |
மூடு