![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/22/Hindu_prayer_rudraksha_japa_mala.jpg/640px-Hindu_prayer_rudraksha_japa_mala.jpg&w=640&q=50)
அக்சமாலிகா உபநிடதம்
சைவ சமய உரை / From Wikipedia, the free encyclopedia
அக்சமாலிகா உபநிடதம் (Akshamalika Upanishad) ( சமக்கிருதம்: अक्षमालिका उपनिषद् ) என்பது சமசுகிருதத்துல் எழுதப்பட்ட இந்து சமயத்தின் சிறிய உபநிடதங்களில் ஒன்றாகும். இருக்கு வேதத்துடன் தொடர்புடைய [1] இது 14 சைவ (சிவன் தொடர்பான) உபநிடதங்களில் ஒன்றாகும்.[1]
அக்சமாலிகா உபநிடதம் | |
---|---|
![]() உருத்துராட்ச மணிகளைக் கொண்ட பிரார்த்தனை மாலை | |
தேவநாகரி | अक्षमालिका |
சமக்கிருத ஒலிப்பெயர்ப்பு | அக்ஷமாலிகா |
உபநிடத வகை | சைவம்[1] |
தொடர்பான வேதம் | இருக்கு வேதம்[1] |
அடிப்படைத் தத்துவம் | சைவ சமயம், வேதாந்தம் |
உபநிடதம் அக்சமாலை (பிரார்த்தனை மாலை) பற்றியும் பிரார்த்தனையில் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் விவரிக்கிறது.[2] உரை பல்வேறு வகையான பிரார்த்தனை மாலைகள், அவற்றின் முக்கியத்துவம், தொடர்புடைய மந்திரங்கள் மற்றும் குறியீட்டைக் குறிப்பிடுகிறது. [3] மாலையின் உட்புறமுள்ள கயிறு இறுதி யதார்த்தத்தைக் குறிக்கிறது ( பிரம்மம் - ஆன்மா ), அதன் வலதுபுறத்தில் உள்ள வெள்ளியிலான கயிறு சிவனைக் குறிக்கிறது. இடதுபுறத்தில் உள்ள செப்புக் கயிறு விஷ்ணுவையும், முகம் சரசுவதியையும், கீழேயுள்ளது காயத்ரியையும் குறிக்கிறது. ஒவ்வொரு மணியின் துளையும் ஞானத்தை நினைவூட்டுகிறது, மேலும் முடிச்சு பிரகிருதி (இயற்கை) ஆகும். [3][4]
கிளாஸ் குளோஸ்டர்மேயர் இந்த உரையை பஸ்மஜபால உபநிடதம், உருத்ராட்சஜபால உபநிடதம், பிருகஜபால உபநிடதம் மற்றும் காலாக்னி ருத்ர உபநிடதம் ஆகியவற்றுடன் சைவ மதத்தில் உள்ள சடங்குகள் மற்றும் வழிபாட்டு பொருள்களின் அடையாளத்தை விளக்கும் சைவ நூல்களாக வகைப்படுத்துகிறார். [2] இந்த சைவ உபநிடத உரை அர்ப்பணிப்பு மற்றும் தியானத்திற்காக ஜெபமாலையைப் பயன்படுத்துவதைப் பற்றி விவாதிக்கிறது. மற்ற மரபுகளில் ஜெபமாலை பயன்படுத்துவது பொதுவானது.[5][6]
இது அக்சமாலிகோபநிஷத் என்றும் அழைக்கப்படுகிறது.[7]
அக்சமாலா என்பது மணிகளால் ஆன ஒரு சரத்தைக் குறிக்கிறது, அங்கு ஒவ்வொரு மணியும் எழுத்துக்களின் 50 எழுத்துக்களைக் குறிக்கிறது, a (अ) முதல் க்ச (क्ष) வரை, எனவே இது அக்சமாலிகா உபநிடதம் என்று அழைக்கப்படுகிறது. [8] சைன மற்றும் இந்து நூல்களில் அக்சமாலா, அக்சமாலிகா, அக்சசூத்திரம், உருத்ராட்சமாலா, சர்சகமலா மற்றும் ஜபமாலை ஆகியனவற்றை ஜெபமாலைகளுக்கான மாற்றுப் பெயர்களாக எர்ன்ஸ்ட் லியூமன் கூறுகிறார்.[9]