துக்ளக் வம்சம்
தில்லி சுல்தானகத்தை ஆண்ட மூன்றாவது அரசமரபு (ஆட்சி. 1320-1413) / From Wikipedia, the free encyclopedia
துக்ளக் அரசமரபு (ஆங்கிலம்: Tughlaq dynasty; பாரசீக மொழி: تغلق شاهیان) என்பது நடுக் கால இந்தியாவில் தில்லி சுல்தானகத்தை ஆண்ட மூன்றாவது அரசமரபு ஆகும்.[9] தில்லியில் இந்த அரசமரபின் ஆட்சிக் காலமானது 1320ஆம் ஆண்டு, கியாதல்தீன் துக்ளக் என்ற பட்டத்துடன் காசி மாலிக் அரியணைக்கு ஏறிய போது தொடங்கியது. இந்த அரசமரபானது 1413ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.[1][10]
விரைவான உண்மைகள் துக்ளக் அரசமரபு(தில்லி சுல்தானகம்), தலைநகரம் ...
துக்ளக் அரசமரபு (தில்லி சுல்தானகம்) | |||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1320–1413[1] | |||||||||||||||||||||||
தலைநகரம் | தில்லி | ||||||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | பாரசீக மொழி (அதிகாரப்பூர்வ மொழி)[8] | ||||||||||||||||||||||
சமயம் | சன்னி இசுலாம் | ||||||||||||||||||||||
அரசாங்கம் | சுல்தான் | ||||||||||||||||||||||
சுல்தான் | |||||||||||||||||||||||
• 1320–1325 | கியாதல்தீன் துக்ளக் | ||||||||||||||||||||||
• 1325–1351 | முகம்மது பின் துக்ளக் | ||||||||||||||||||||||
• 1351–1388 | பிரூசு ஷா துக்ளக் | ||||||||||||||||||||||
• 1388–1413 | கியாதுத்தீன் துக்ளக் ஷா / அபு பக்கர் ஷா / முகம்மது ஷா / மகுமூது துக்ளக் / நுசுரத் ஷா | ||||||||||||||||||||||
வரலாற்று சகாப்தம் | மத்தியகால இந்தியா | ||||||||||||||||||||||
• தொடக்கம் | 1320 | ||||||||||||||||||||||
• முடிவு | 1413[1] | ||||||||||||||||||||||
நாணயம் | தாகா | ||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா நேபாளம் பாக்கித்தான் வங்காளதேசம் |
மூடு
முகம்மது பின் துக்ளக்கால் தலைமை தாங்கப்பட்ட ஓர் இராணுவ படையெடுப்பின் மூலமாக இந்த அரசமரபு அதன் நிலப்பரப்பை விரிவாக்கிக் கொண்டது. 1330 மற்றும் 1335 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இது அதன் உச்சபட்ச பரப்பளவை அடைந்தது. இந்த குறுகிய காலத்திற்கு பெரும்பாலான இந்திய துணைக்கண்டத்தை இது ஆண்டது.[5][11]