இரண்டாம் காம்பிசெஸ்
From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் காம்பிசெஸ் (Cambyses II) (ஆட்சிக் காலம்:கிமு 530 - கிமு 522) பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசை கிமு 530 முதல் 522 முடிய பனிரெண்டு ஆண்டுகள் ஆண்டவர். இவர் பேரரசர் சைரசுவின் மகன் ஆவார்.[1][2] இவர் அரியணை ஏறுவதற்கு முன்னர் கிமு 539-கிமு 538-களில் பண்டைய அண்மை கிழக்கின் வடக்கு பபிலோனியாவின் ஆளுநராக இருந்த போது பாபிலோன் மற்றும் சிப்பர் நகரங்களைக் கைப்பற்றியவர்.
இரண்டாம் காம்பிசெஸ் | |
---|---|
அகாமனிசியப் பேரரசர் மன்னர்களின் மன்னர் பாரசீகப் பேரரசர் பாபிலோனிய மன்னர் எகிப்தின் பார்வோன் | |
ஆபிஸ் எனும் எகிப்திய எருதுக் கடவுளை (இடது) மண்டியிட்டு வணங்கும் எகிப்திய பார்வோன் காம்பிசெஸ் சிற்பம், கிமு 524 | |
அகாமனியப் பேரரசர் | |
ஆட்சிக்காலம் | 530 – கிமு 522 |
முன்னையவர் | சைரசு |
பின்னையவர் | பார்த்தியா |
Co-ruler | சைரசு (கிமு 530) |
எகிப்திய பார்வோன் | |
ஆட்சிக்காலம் | 525 – சூலை 522 கிமு |
முன்னையவர் | மூன்றாம் சாம்திக் |
பின்னையவர் | பார்த்தியா |
இறப்பு | கிமு 522 ஹமா |
மரபு | அகமானிய வம்சம் |
தந்தை | சைரசு |
தாய் | காசாந்தனி |
மதம் | சொராட்டிரிய நெறி |
கிமு 530-இல் இரண்டாம் காம்பிச்செஸ் அரியணை ஏறுவதற்கு முன்னர் தனது தந்தை சைரசுயுடன் இணை ஆட்சியாளராக இருக்கையில், சைரசு நடு ஆசியாவின் போர்க்குணம் கொண்ட நாடோடி மக்களை எதிர்த்து போரிடுகையில் இறந்தார். இதனால் இரண்டாம் காம்பிசெஸ் அகமானிசியப் பேரரசின் மணிமகுடம் ஏந்தினார்.
காம்பிசெஸ் தன் ஆட்சிக் காலத்தில் வட ஆப்பிரிக்காவின் எகிப்து, நூபியா மற்றும் குஷ் இராச்சியங்களையும், மத்தியதரைக் கடலின் தீவு நாடான சைப்பிரசையும் கைப்பற்றினார்.
கிமு 522-இல் பாரசீகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த உள்நாட்டுப் போரை அடக்குவதற்கு எகிப்திலிருந்து சிரியா வழியாக பாரசீகம் சென்று கொண்டிருந்த காம்பிசெஸ்சை, ஒரு நாடோடி கூட்டம் எய்திய அம்பால் தொடையில் பெருங்காயத்துடன் மூன்று வாரங்கள் கழித்து மெசொப்பொத்தேமியாவின் ஹமா எனும் நகரில் இறந்தார். மனைவி, குழந்தைகள் இன்றி இறந்த இரண்டாம் காம்பிசெஸ்சின் தம்பி பார்த்தியா அகமானிசியப் பேரரசின் அரியணை ஏறினார்.