மேலதிகத் தகவல்கள் அறிமுகம், சிறப்புக் கட்டுரைகள் ...
அறிமுகம்
சிவபெருமானுடன் சம்மந்தமான அனைத்தும் சைவம் என்று அறியப்பெறுகிறது. சைவநெறியென்றும், சிவநெறியென்றும், சிவ வழிபாடென்றும் சைவ சமயம் வழங்கப்பெறுகிறது. சிவவழிபாடு தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டிலிருந்து தோன்றியதாகும். ஆதி சைவம், வீர சைவம், சித்தாந்த சைவம் என பல வகை பிரிவுகளை உள்ளடக்கிய இச்சமயம், இந்து மதத்தின் வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்தியம் முதலிய இந்து சமயப்பிரிவுகளையும் தன்னுள் இணைத்துக் கொண்டது. கல்லாடம் எனும் நூல் மூலம் முதல் தமிழ்ச்சிற்றிலக்கியத்தை தோற்றுவித்தது, பக்தி இலக்கிய காலத்தில் நாயன்மார், சமயக்குரவர் போன்றோரின் எழுச்சியால் எண்ணற்ற சைவ இலக்கியத்தினை படைத்தது என்று சைவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டால் 'சைவத்தமிழ்' என்று அழைக்கப்பெறுகிறது.
சிவபெருமான்சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளாவர். தமிழர்களின் ஐந்தினை தெய்வங்களுள் ஒன்றாக இருந்த சேயோன் வழிபாடே சிவ வழிபாடாக மாறியது என்று கூறப்படுகிறது. இந்த வழிபாடானது, சிவ மதமென்றும், சைவ மதமென்றும் அறியப்பெறுகிறது. சிவனிடமிருந்தே அனைத்தும் தோன்றியதாகவும், ஆழிக்காலத்தில் சிவனுடைய சதாசிவ ரூபத்தில் அனைத்தும் அடங்குவதாகவும் சைவநூல்கள் விளக்குகின்றன. சிவபெருமானின் சக்தி வடிவமாக உமையம்மை வழிபடப்படுகிறார். இத்தம்பதிகளுக்கு விநாயகன், முருகன் என்ற இரு குழந்தைகள் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இவருக்கு கையிலை மலை இருப்பிடமாகவும், குறிஞ்சி நிலத்துக்குறிய கொன்றை மலர் மாலையாகவும், வெண் காளை சிவவாகனமாகவும், வாசுகி பாம்பு ஆபரணமாகவும் அறியப்பெறுகிறது. இந்து சமயத்தின் சக்திவாய்ந்த மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளாகவும், சைவத்தில் படைத்தல், அழித்தல், காத்தல், அருளல், மறைத்தல் என்ற ஐந்தொழில்களையும் செய்பவராகவும் அறியப்பெறுகிறார். அத்துடன் அறுபத்து நான்கு கலையில் வல்லவராகவும், அருவம், உருவம், அருவுருவம் என தோற்றமளிப்பவராகவும் வணங்கப்பெறுகிறார்.
காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப்பெறும் இவரின் இயற்பெயர் புனிதவதி என்பதாகும். கையிலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, சிவபெருமான்அம்மையே என்று அழைத்ததன் காரணமாகவும், காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதாலும் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப்பெறுகிறார். பரமதத்தன் என்பவரை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தவர், ஒரு நாள் கணவன் கொடுத்தனுப்பிய மாம்பழத்தினை சிவனடியாருக்கு படைத்துவிட்டு, அந்த மாம்பழத்தினை கணவன் கேட்க, இறைவனிடம் வேண்டி மாம்பழத்தினைப் பெற்ற நிகழ்விலிருந்து இறைவனை சரணடைந்தார்.
இவர் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார். அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை போன்ற நூல்களைத் தந்து சைவத்தமிழுக்கு பெரும் தொண்டாற்றியுள்ளார். இவருடைய பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் இயற்றப்பட்டன.
அமுதம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த பொழுது வெளிபட்ட ஆலகாலம் அவர்களைத் துரத்தியது. தங்களைக் காப்பாற்ற வேண்டி சிவபெருமான் வசிக்கும் கையிலைக்கு சென்றார்கள். இமயமலையை தேவர்கள் வலமாக சுற்றும் போது ஆலகாலம் வழிமறைத்தது. அதனால் தேவர்கள் வந்த வழியே திரும்பி சுற்ற இம்முறை ஆலகாலம் இடப்புறம் வந்து எதிர்த்தது. இவ்வாறு வலமும் இடமுமாக மாறி மாறி பயமுருத்திய ஆலகாலத்தினை சிவபெருமான் உண்டு தேவர்களை காத்தார். ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை சுற்றிய விதத்தினை சோம சூக்தப் பிரதட்சணம் என்கிறார்கள் சைவர்கள்.
உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளில் மூன்று வரிகளுக்கும் மேல் குறுங்கட்டுரைகளாகவாவது இயன்றவரை உருவாக்கலாம். தக்க ஆதாரங்களை இணைத்து சிறப்பான கட்டுரையாக்குதல் மேலும் சிறப்பு.
விக்கித் திட்டம் சைவத்தில் பங்களிப்பாளர்களுக்கு வழிகாட்டுதலையும், சிறப்பான செயல்பாடுகளுக்காக பயனர்களுக்கு பதக்கங்கள் கொடுத்து ஊக்கத்தினையும் செய்யலாம்.