புதுச்சேரி
இந்தியாவின் ஒன்றியப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
புதுச்சேரி (பிரெஞ்சு: Pondichéry, ஆங்கிலம்: Puducherry) அல்லது பாண்டிச்சேரி எனவும் இந்த ஒன்றியப் பகுதி அழைக்கப்படுகின்றது. சென்னை மாநகரில் இருந்து 170 கி.மீ. தொலைவில், இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியாக வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ளது. முன்பு இந்த நகரம் பிரெஞ்சு நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. புதுச்சேரி, ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. இதனை சுருக்கமாக புதுவை என்றும் பாண்டி என்றும் அழைக்கப்படுகின்றது. வரலாற்று ரீதியாக பாண்டிச்சேரி (Pāṇṭiccēri) என்று அழைக்கப்பட்டு வந்த இப்பிரதேசம், அதன் அதிகாரப்பூர்வ பெயராக, 20 செப்டம்பர் 2006 அன்று புதுச்சேரி என மாற்றப்பட்டது.[8][9]
புதுச்சேரி | |
---|---|
மேலிருந்து கடிகார சுழல் திசையில்: புரோமேனடே கடற்கரை, மாத்ரிமந்திர், புதுச்சேரி துறைமுகம், புதுச்சேரி கடற்கரை | |
சின்னம் | |
பண்: தமிழ்த்தாய் வாழ்த்து | |
இந்திய வரைபடத்தில் உள்ள புதுச்சேரியின் இடம் (சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது) | |
ஆள்கூறுகள்: 11.911082°N 79.812533°E / 11.911082; 79.812533 | |
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரம் | பாண்டிச்சேரி |
மாவட்டம் | |
அரசு | |
• நிர்வாகம் | புதுச்சேரி அரசு |
• துணைநிலை ஆளுநர் | தமிழிசை சௌந்தரராஜன் (கூடுதல் பொறுப்பு)[1] |
• முதலமைச்சர் | ந. ரங்கசாமி |
• தலைமைச் செயலாளர் | அஸ்வானி குமார், இ.ஆ.ப.[2] |
• காவல்துறையின் தலைமை இயக்குனர் | பாலாஜி ஸ்ரீவஸ்தவா, இ.கா.ப[3] |
• சட்டமன்றப் பேரவை | ஓரவை முறைமை (33*) [4] |
பரப்பளவு | |
• மொத்தம் | 483 km2 (186 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 33-ஆவது |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 13,94,467 |
• தரவரிசை | 29-ஆவது |
• அடர்த்தி | 2,900/km2 (7,500/sq mi) |
இனம் | புதுச்சேரியர் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ், ஆங்கிலம்[5] |
• கூடுதல் அலுவல்மொழி | மலையாளம் (மாகேவில்), தெலுங்கு (யானமில்), பிரெஞ்சு[6] |
நேர வலயம் | ஒசநே+05:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீடு | 605 014 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-PY |
வாகனப் பதிவு | PY 01, PY 02, PY 03, PY 04, PY 05 |
HDI (2018) | 0.738 (High) •7-ஆவது |
இணையதளம் | www |
சின்னங்கள் | |
சின்னம் | புதுச்சேரி அரசு சின்னம் |
விலங்கு | இந்திய அணில்[7] |
பறவை | குயில்[7] |
மலர் | நாகலிங்கம் மலர்[7] |
மரம் | வில்வம்[7] |
^* 30 தேர்ந்தெடுக்கப்பட்டார், 3 பரிந்துரைக்கப்பட்டார் |
அதனால் இங்குள்ள அடித்தட்டு மக்களும் பிரெஞ்சுச் சொற்களை, மிகச் சாதாரணமாகப் பயன்படுத்துகின்றனர். ஆந்திர மாநிலத்தின், காக்கி நாடாவுக்கு அருகாமையில் உள்ள யானம் நகரும், தமிழகத்தின், நாகப்பட்டினத்தின் அருகாமையில் உள்ள காரைக்கால் நகரும், கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டுக்கு அருகில் உள்ள மாஹே நகரும், இந்த மாநிலத்தின் ஆட்சிப் பகுதிகளாக விளங்குகின்றன.
ஆகையால், ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் மொழிகளுடன், தெலுங்கு, மலையாளம் மொழி பேசும் மக்களும் சிறுபான்மையினராக இங்கு வாழ்ந்து வருகின்றனர்.