வேட்டையாடுதல்
From Wikipedia, the free encyclopedia
வேட்டையாடுதல் (Hunting) வாழும் உயிர்களை, குறிப்பாக காட்டு விலங்குகளை, உணவு, மகிழ்ச்சி, வியாபாரம் போன்றவற்றிற்காக பிடிப்பது மற்றும் கொலை செய்வது ஆகும். இச்செயலை மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் செய்கின்றன.[1] வியாபாரப் பொருட்களுக்காக வேட்டையாடப்படும் உயிரினங்களின் பொருட்கள் நாடு கடத்தப்படுவது குற்றம் என அரசு சட்டங்கள் தெரிவிக்கின்றன, பன்னெடுங்காலமாக தமிழ் அரசர்கள் வேட்டையாடியதைப் பற்றி இலக்கியங்கள் கூறுகின்றன. அழிவில் இருக்கின்ற விலங்குகளை வேட்டையாடுதல் தொடர்பான சட்டங்கள் பல நாடுகளில் இயற்றப்பட்டுள்ளன. இந்து சமய புராணங்கள் அரசர்கள் வேட்டையாடுதலை பொழுதுபோக்காகக் கொண்டிருந்தனர் எனக் கூறுகின்றன.
வேட்டையாடுதலுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. நம் முன்னோர்களுக்கும் முந்தைய ஆதி மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடி இறைச்சி உண்கின்ற போது ஆரம்பித்ததன் பழக்கம் இன்று வரை இருக்கலாம். பெரிய விலங்குகளிடம் இருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ள ஆரம்பித்த இப்பழக்கம் பின்னர் உணவுப் பழக்கமாகவும் மாறி இருக்கலாம். நாகரிகம் அடைந்து சமவெளிகளில் குடியேறுவதற்கு முன்னரும், விவசாய நிலங்களை உருவாக்கிப் பயிரிடுதலைக் கற்றுகொள்வதற்கும் முன்னர் வேட்டையாடுதல் உணவளிக்கும் ஒரு செயலாய் இருந்து வந்தது.[2]