வீட்டுக் காவல்
From Wikipedia, the free encyclopedia
வீட்டுக் காவல் அல்லது வீட்டுச் சிறை என்பது ஒருவரை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக அவரின் நடமாட்டத்தையும், பிறருடன் நேரடியாகவோ, மறைமுகவாகவோ மற்றும் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் வசதிகள் மூலம் வெளி உலகத்தினருடன் தொடர்பு கொள்ள இயலாத வகையில் தனிமைப்படுத்த, அவரது வீட்டிலேயே முடக்கி வைப்பதாகும்.[1]
ஒரு அரசின் கொள்கைகளை எதிர்த்து, மக்களை போராட்டத்தில் ஈடுபடுத்தும், அரசியல்செல்வாக்கு மிக்க அரசியல் அதிருப்தியாளர்களை, நீதிமன்ற ஆணை மூலம் காவல் துறையினர், சிறையில் அடைப்பதற்கு பதிலாக அவர் தங்கியிருக்கும் வீட்டிலேயே வெளி உலகத் தொடர்புகள் இன்றி தனிமைப் படுத்தி வைத்துவிடுவர். வீட்டுச் சிறையில் வைக்கப்படுபவர் யாரிடனும் தொடர்பு கொள்ள முடியாதவாறு, வீட்டைச் சுற்றி காவலர்கள் நிறுத்தப்படுவர். மேலும் தொலைபேசி, அலைபேசி, இணைய வசதிகளின் இன்றி வெளி உலக தொடர்புகள் துண்டிக்கப்படும்.