விழிஞம்
From Wikipedia, the free encyclopedia
விழிஞம் பாண்டியர் நாட்டுத் துறைமுகம். இது சங்ககாலத்தில் பாண்டியர் கீழிருந்த ஆய் நாட்டில் இருந்த தொலெமி குறிப்பிடும் எலங்கோன் நகரமே என்பது மயிலையார் கருத்து.[1] மேலும் நெடுமாறன் என்ற பாண்டியன் சேர அரசனோடு கோட்டாற்றிலும் விழிஞத்திலும் போர் செய்தானெனப் பாண்டிக்கோவை கூறுகின்றது.[2] இதில் விழிஞத்தில் நடந்தது கடற்போர் என்பது குறிப்பிடத்தக்கது.[3]