விக்டோரியா காலம்
பிரிட்டிஷ் வரலாற்றின் காலம் (1837-1901) / From Wikipedia, the free encyclopedia
விக்டோரியா காலம் என்பது இங்கிலாந்து வரலாற்றில் விக்டோரியா மகாராணி ஆட்சிபுரிந்த 20 ஜூன் 1837 முதல், 22 ஜனவரி 1901 அவர் இறந்ததையடுத்து முடிவுக்கு வந்த கால இடைவெளியை குறிக்கிறது. இக்காலம் நீண்டகால சமாதானம், செழிப்பு, செம்மையான உணர்திறன், தேசிய சுய நம்பிக்கை ஆகியவற்றைக் கொண்டிருந்தது.[1] சில அறிவியலாளர்கள் இக்காலத் தொடக்கத்தில் இருந்த உணர்திறன், அரசியல் கருத்துகள் என்பன 1832 சீர்திருத்த சட்டத்திற்கு வித்திட்டது என்பர்.