வண்ணநிலவன்
From Wikipedia, the free encyclopedia
வண்ணநிலவன் (Vanna Nilavan, பிறப்பு: திசம்பர் 15, 1949) ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். தூத்துக்குடி மாவட்டம், தாதன்குளம் இவரது சொந்த ஊர்.திருநெல்வேலியில் பிறந்த இவரின் இயற்பெயர் உ. ராமச்சந்திரன் ஆகும். இவர் பாளையங்கோட்டை, திருநெல்வேலி , ஸ்ரீ வைகுண்டம் ஆகிய ஊர்களில் படித்தார1973-ல் சென்னைக்கு வேலை தேடி வந்தார். கண்ணதாசன்,கணையாழி,புதுவைக்குரல் போன்ற பத்திரிகைகளிலும், 1976-ல் துக்ளக் பத்திரிகையிலும் பின்னர் ‘சுபமங்களா’ பத்திரிகையிலும் ஆசிரியர் குழுவில் சிறிது காலம் வேலை பார்த்தார். தமிழில் குறிப்பிடத்தகுந்த திரைப்படமான ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தின் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார்.
விரைவான உண்மைகள் வண்ணநிலவன், பிறப்பு ...
வண்ணநிலவன் | |
---|---|
பிறப்பு | உ. ராமச்சந்திரன் (1949-12-15)15 திசம்பர் 1949 தாதன்குளம், தூத்துக்குடி, தமிழ்நாடு ![]() |
இருப்பிடம் | கோடம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு |
பணி | எழுத்தாளர் |
பெற்றோர் | உலகநாதபிள்ளை இராமலட்சுமி அம்மாள் |
வாழ்க்கைத் துணை | சுப்புலட்சுமி (1977 - தற்போது வரை) |
பிள்ளைகள் | ஆனந்த் சங்கர் சசி உமா |
விருதுகள் | இலக்கியச் சிந்தனை தமிழ் வளர்ச்சி கழக பரிசு ராமகிருஷ்ண ஜெய்தயாள் விருது |
மூடு