வ. உ. சிதம்பரம்பிள்ளை
முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர் / From Wikipedia, the free encyclopedia
வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை[2](V. O. Chidambaram Pillai, செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936)[3] ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது.
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
விரைவான உண்மைகள் வ. உ. சிதம்பரம்பிள்ளை, பிறப்பு ...
வ. உ. சிதம்பரம்பிள்ளை | |
---|---|
வ. உ. சிதம்பரம்பிள்ளை | |
பிறப்பு | 5 செப்டெம்பர் 1872 ஓட்டப்பிடாரம், திருநெல்வேலி மாவட்டம், மெட்ராஸ் மாகாணம், பிரித்தானியாவின் இந்தியா |
இறப்பு | 18 நவம்பர் 1936(1936-11-18) (அகவை 64) |
தேசியம் | இந்தியன் |
மற்ற பெயர்கள் | வ. உ. சி, கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் |
அமைப்பு(கள்) | சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் |
அரசியல் இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம் |
பெற்றோர் | உலகநாத பிள்ளை பரமாயி அம்மாள் |
வாழ்க்கைத் துணை | வள்ளி அம்மையார்(1885–1900) மீனாட்சி அம்மையார் |
பிள்ளைகள் | உலகநாதன் ஆறுமுகம் சுப்பிரமணியன் வாலேசுவரன் ஞானம்பிகை வேதவல்லி ஆனந்தவல்லி மரகதவல்லி[1] |
மூடு