உருத்திரன்
From Wikipedia, the free encyclopedia
பிறபயன்பாட்டுக்கு, உருத்திரர்கள் என்பதைப் பாருங்கள்.
ருத்ரன் (ஒலிப்புⓘ) (Rudra) என்பவர் சைவ சமயக் கடவுளான சிவனின் அழிக்கும் தொழில் செய்யும் உருவம் ஆகும். ருத்திரன் என்றால் துன்பத்தை நீக்குபவர் என்று பொருள்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6e/Rudra.gif/250px-Rudra.gif)
ருத்ரன் படைக்கும் கடவுளான பிரம்மானின் மகன் என்று வாயு புராணம் கூறுகிறது. பிரம்மா தனக்கு தன்னைப் போலவே ஒரு மகன் வேண்டுமென நினைத்த பொழுது ருத்ரன் அவர் மடியின் மீது தோன்றினார். அத்துடன் அழுதுகொண்டே இருந்தார். அதற்கு பிரம்மா காரணம் கேட்க, தனக்கு ஒரு பெயர் வேண்டுமென ருத்ரன் கூறினார். பிரம்மா அந்த மகனுக்கு ருத்ரன் என்று பெயரிட்டார்.[1]