ருக்மிணி தேவி அருண்டேல்
From Wikipedia, the free encyclopedia
உருக்மிணி தேவி அருண்டேல் (Rukmini Devi Arundale) (பெப்ரவரி 29, 1904 – பெப்ரவரி 24, 1986) மதுரையில் பிறந்தவர். இவர் ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞர். கலாசேத்திரா என்ற நடனப் பள்ளியினை நிறுவியவர். சமூகத்தில் ஒரு சாரார் மட்டும் பயின்ற சதிர் என்ற நடனத்திற்கு, பரதநாட்டியம் என்ற பெயரிட்டு பலரும் பரவலாக பயில முனைப்புடன் செயல்பட்டவர். 1977 ஆம் ஆண்டு, மொரார்ஜி தேசாய், இவரை இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தப் போது அதை மறுத்தார்.
விரைவான உண்மைகள் உருக்மிணி தேவி அருண்டேல், பிறப்பு ...
உருக்மிணி தேவி அருண்டேல் | |
---|---|
![]() | |
பிறப்பு | உருக்மிணி தேவி (1904-02-29)29 பெப்ரவரி 1904 மதுரை, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 24 பெப்ரவரி 1986(1986-02-24) (அகவை 81) சென்னை, தமிழ்நாடு |
செயற்பாட்டுக் காலம் | 1920–1986 |
வாழ்க்கைத் துணை | ஜார்ஜ் அருண்டேல் (தி 1920) |
விருதுகள் | பத்ம பூசண்: 1956 சங்கீத நாடக அகாதமி கூட்டாளர்: 1967 |
மூடு