ரிஷி
முனிவர். / From Wikipedia, the free encyclopedia
ரிஷி (Rishi) (சமக்கிருதம்: ऋषि தவ வலிமையல், இறைவனிலிருந்து வரும் ஒலி அலைகளை கிரகித்து உணர்ந்து வேத மந்திரங்களை இயற்றும் ஆற்றல் படைத்த தவ சீலர்கள் ஆவார். ரிஷிகளை [1][2] மந்திரதிரஷ்டா என்பர்.[3] வேத மந்திரங்களின் சப்தத்தை உணர்ந்து அறியும் ஆற்றல் பெற்றவர்கள் என்று இதற்குப் பொருளாகும். தங்களால் அறியப்படும் வேதமந்திரங்களை ரிஷிகள் செய்யுள் வடிவிலும், சூக்தங்களாகவும் அமைத்துப் பாடி வைத்தனர்.[4] ரிஷிகளின் தாங்கள் கண்டறிந்த ஒலி அலைகளை மந்திரங்களாகப் படைத்து வேத மந்திரங்களை அமைத்தனர். பின்னர் வந்த முனிவர்கள் தங்கள் வசதிக்காக வேதத்தை இருக்கு, சாமம், யஜூர் மற்றும் அதர்வணம் என நான்காகப் பிரித்தனர்.