![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f2/Rinjani_1994.jpg/640px-Rinjani_1994.jpg&w=640&q=50)
ரிஞ்சனி மலை
From Wikipedia, the free encyclopedia
ரிஞ்சனி மலை (Mount Rinjani; அல்லது ரிஞ்சனி குனுங் (Gunung Rinjani) இது தென்கிழக்காசியா, மற்றும் ஓசியானியா என இரு கண்ட நாடான இந்தோனேசியாவின் மேற்கு நுசா டென்காரா மாகாணத்தில், உள்ள லொம்போத் தீவில் அமைந்துள்ள ஒரு எரிமலையாகும். 3.726 மீட்டர் (12,224 அடி) உயரமுடைய இது, இந்தோனேசியாவின் இரண்டாவது மிக உயர்ந்த எரிமலையாக விளங்குகிறது.[2] மேலும் இம்மலை நிர்வாக ரீதியாக, மேற்கு நுசா டென்காரா பகுதியின் வட லொம்போ (இந்தோனேசியன்: நுசா டென்காரா பாராட், NTB). ஆட்சியின் கீழ் உள்ளது.[3]
ரிஞ்சனி மலை Mount Rinjani | |
---|---|
பருசரி மலை | |
![]() 1995 வெடிப்பு | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 3,726 m (12,224 அடி)[1] |
புடைப்பு | 3,726 m (12,224 அடி)முக்கியத்துவம் மூலம் சிகரங்களின்த, ரவரிசையில் 38 வது |
பட்டியல்கள் | அல்ட்ரா ரிபு |
ஆள்கூறு | 8.414414°S 116.459767°E / -8.414414; 116.459767[1] |
பெயரிடுதல் | |
தாயகப் பெயர் | ரிஞ்சனி குனுங் Error {{native name checker}}: parameter value is malformed (help) |
புவியியல் | |
அமைவிடம் | ரிஞ்சனி குனுங் தேசிய பூங்கா லொம்போ, ![]() |
மூலத் தொடர் | சுந்தா சிறு தீவுகள் |
நிலவியல் | |
பாறையின் வயது | உரிய காலம் கடந்த (இடையூழிக் காலம்) |
மலையின் வகை | சொம்மா எரிமலை |
Volcanic arc | சுந்தா பரிதி |
கடைசி வெடிப்பு | 29 செப்டம்பர் 2016 (2016-09-29) |
ஏறுதல் | |
எளிய வழி | சேணுறு (Senaru) |
இயல்பு அணுகு வழி | செம்பலுன் (Sembalun) |
அணுக்கம் | வரம்பிட்டுள்ளனர் |
இந்த எரிமலையின் மேற்கூரையில், 6-8.5 கிலோ மீட்டர் (3.7 மைல் - 5.3) அகன்ற எரிமலைவாய் ஒரு ஏரியாக அமைந்துள்ளது. "செகரா அனாக்" அல்லது "அனாக் லாட்" (Segara Anak or Anak Laut) (கடலின் குழந்தை (Child of the Sea) என்றழைக்கப்படும் இந்த எரிமலைமுகடு ஏரியின் ஒரு பகுதி நிறைந்துள்ள நீரின் நிறம் காரணமாக, கடல் போன்ற நீல நிறமாக மிளிர்கிறது.[4] மேலும் அகன்ற எரிமலைவாய் வெந்நீர் ஊற்றுகள் உள்ள இந்த ஏரி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,000 மீட்டர் (6,600 அடி) உயரத்திலும், மற்றும் சுமார் 200 மீட்டர் (660 அடி)[5] ஆழமானதாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[6] சாசாக் (Sasak people) பழங்குடிகள் மற்றும் இந்து சமய மக்கள் என ஏரி மலையில் உள்ள இரண்டு பகுதிகளில் எப்பொழுதாவது புனிதமான சில சமய செயல்பாடுகள் செய்கின்றனர்.[4] மேலும் சமீபத்திய நிகழ்வாக, 2016, செப்டம்பர் 29 அன்று, ரிஞ்சனி வெடித்தது குறிப்பிடக்கூடியதாகும்.[7]