இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
ராகிணி (1937-1976), தென்னிந்திய நடிகை, பரதக் கலைஞர். திருவிதாங்கூர் சகோதரிகளில் (லலிதா,பத்மினி) ராகினி இளையவர்.[1] 1950களில் இவர் தம் திரைப்பயணத்தைத் தொடங்கினார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் தம் முத்திரையைப் பதித்தார். தென்னிந்திய நடிகையாக இருந்த போதிலும் மலையாளத்திலும் இந்தி திரைப்படங்களிலும் அதிகம் நடித்துள்ளார்.
ராகினி | |
---|---|
ராகிணி ஒரு மலையாளத் திரைப்படத்தில் | |
பிறப்பு | 7 ஏப்ரல் 1939 திருவனந்தபுரம், திருவிதாங்கூர் |
இறப்பு | 30 திசம்பர் 1976 |
சமயம் | இந்து |
பெற்றோர் | தங்கப்பன், சரஸ்வதி |
வாழ்க்கைத் துணை | மாதவன் தம்பி |
பிள்ளைகள் | லட்சுமி, பிரியா |
உறவினர்கள் | லலிதா, பத்மினி, சந்திரசேகர் |
இவர் திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் பிறந்தார். இவரது பெற்றோர் தங்கப்பன், சரஸ்வதி ஆவர். இவரது மூத்த சகோதரி லலிதா, இரண்டாமவர் பத்மினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள் திருவிதாங்கூர் சகோதரிகள் என அழைக்கப்பட்டனர். மூவரும் பரதக்கலையை குரு.கோபிநாத், மற்றும் குரு.மகாலிங்கம் பிள்ளையிடம் கற்று நன்கு தேர்ச்சி பெற்றனர். இவர்களது சகோதரர் பெயர் சந்திரசேகர் ஆகும். ராகினி, மாதவன் தம்பி என்பாரை மணந்து கொண்டார். இவர்கட்கு லட்சுமி, பிரியா என இரு மகள்கள் உள்ளனர்.[2]
இந்தி மொழியில் நாட்டியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்திய பெருமை ராகிணி உள்ளிட்ட தென்னிந்திய நடிகைகளையே சாரும்.[3]
இவர் நடித்த திரைப்படங்கள்
திசம்பர் 30, 1976ஆம் ஆண்டு புற்றுநோயால் காலமானார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.