இரத்தினகிரி
மகாராட்டிரதம் / From Wikipedia, the free encyclopedia
இரத்தினகிரி (Ratnagiri) என்பது ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள துறைமுக நகர் ஆகும். இது மகாராஷ்டிரா மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் கொங்கண் மண்டலம் பகுதியின் கீழ் வருகிறது. இக்கடலோரப்பகுதியில் அதிக அளவு மழைப் பொழிவு இருக்கும். இங்கு அரிசி, தேங்காய், முந்திரி, ஆகியனவும் பழவகைகளும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. மீன் பிடித்தல் இங்கு முக்கியத் தொழிலாகும். பால கங்காதர திலகர் இப்பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். 1876-ல் இது நகராட்சியாக மாற்றப்பட்டது.[1]