ரத்னகரந்த சிராவகாசாரம்
From Wikipedia, the free encyclopedia
வார்ப்புரு:Use Indian English
விரைவான உண்மைகள் ரத்னகரந்த சிராவகாசாரம், தகவல்கள் ...
ரத்னகரந்த சிராவகாசாரம் | |
---|---|
சம்பத் ராய் செயின் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ரத்னகரந்த சிராவகாசாரம் (1917) | |
தகவல்கள் | |
சமயம் | சமணம் |
நூலாசிரியர் | ஆச்சாரிய சமந்தபத்திரர் |
மொழி | சமக்கிருதம் |
காலம் | பொ.ஊ. 2ம் நூற்றாண்டு |
மூடு
ரத்னகரந்த சிராவகாசாரம் என்பது சமணத்தின் உட்பிரிவான திகம்பரப் பிரிவைச் சேர்ந்த ஆச்சாரியரான சமந்தபத்திரரரால் (பொ.ஊ. 2ம் நூற்றாண்டு) தொகுக்கப்பட்ட சமண நூலாகும். சமந்தபத்திரர் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவராவார். ரத்னகரந்த சிராவகாசாரம், காலத்தால் மிக முற்பட்டதும், நன்கறியப்பட்டதுமான சிராவகாசார நூலாகும்.
சிராவகாசாரம், சிராவகர் எனப்படும் சமண இல்லறத்தோர் கடைப்பிடிக்கவேண்டிய நெறிமுறைகளைப் பற்றி விவரிக்கும் நூலாகும். ஈராலால் சாசுதிரி, பொ.ஊ. 2ம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரையான 29 இவ்வகை நூல்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.[1]